
இந்திய பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்படும்…!! அமெரிக்க அதிபர் இன்று அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியீடு
அமெரிக்காவின் இரண்டாவது அதிபராக டொனால்ட் டிரம்ப் பதவியேற்ற பிறகு, குடியேற்ற நடவடிக்கை, நாடுகளின் நிதி உதவி நிறுத்தம் உள்ளிட்ட பல்வேறு முக்கிய முடிவுகளை எடுத்து வருகிறார். அதில், குறிப்பாக அமெரிக்க பொருட்களுக்கு அதிக வரி விதிக்கும், பல்வேறு நாடுகளின் பொருட்களுக்கும் கூடுதல் வரி விதிக்கப்படும் என சமீபத்தில் அறிவித்தார். மேலும், ஏப்ரல் 1 ஆம் தேதி முட்டாள்கள் தினம் என்பதால், ஏப்ரல் 2 ஆம் தேதியில் இருந்து இந்த நடைமுறை அமலுக்கு வரும் என்றும் உத்தரவிட்டார்.
அந்தவகையில், இன்று முதல் இந்தியா, தென்கொரியா, பிரேசில், கனடா, மெச்சிக்கோ மற்றும் வெனிசுலா ஆகிய நாடுகளின் இறக்குமதி பொருட்களுக்கு கூடுதல் வரி விதிக்கப்பட்டுள்ளது. மேலும், இதுகுறித்த அதிகாரபூர்வ அறிவிப்பை இந்திய நேரப்படி இன்று இரவு வெளியிடுவார் என எதிர்பார்க்கப்படுகிறது. மேலும், இன்றைய தினத்தை “விடுதலை தினம்” என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

























