தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு அதிரடி உத்தரவு.. இனி இது தேவை இல்லை – ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்!

0
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு அதிரடி உத்தரவு.. இனி இது தேவை இல்லை - ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு அதிரடி உத்தரவு.. இனி இது தேவை இல்லை - ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்!
தமிழகத்தில் மின்சார வாரியத்திற்கு அதிரடி உத்தரவு.. இனி இது தேவை இல்லை – ஒழுங்குமுறை ஆணையம் அறிவுறுத்தல்!

தமிழகத்தில் வீட்டு பயன்பாட்டிற்கான மின் இணைப்பை, வணிக பயன்பாட்டிற்கான மின் இணைப்பாக மாற்ற கட்டட பணி நிறைவு சான்று கேட்க கூடாது என மின்சார வாரியத்துக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

வெளியான அறிவிப்பு

தமிழகத்தில் பொதுமக்களுக்கு சேவை செய்யும் துறைகளில் ஒன்றாக மின்சாரத் துறை இருக்கிறது. இந்நிலையில் தற்போது மின்சார வாரியத்துக்கு தமிழ்நாடு மின்சார ஒழுங்குமுறை ஆணையம் முக்கிய அறிவுறுத்தல் ஒன்றை அனுப்பி இருக்கிறது. அதாவது வீட்டு பயன்பாட்டிற்கு மின் இணைப்பில் இருந்து வணிக பயன்பாட்டிற்கு மாற்ற விண்ணப்பிக்கும் நுகர்வோரிடம் கட்டடப் பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க சொல்வதாக சில தகவல்கள் வெளியாகி இருக்கிறது. அவ்வாறு சமர்பிக்காமல் இருந்தால் மின் இணைப்பு துண்டிக்கப்படும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.

திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக. 09ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!

இது குறித்து கோவை அருகே கவுண்டம்பாளையத்தை சேர்ந்த எஸ். மைக்கேல் ராஜ் என்பவர் மனு தாக்கல் செய்துள்ளார். இதுவரை கட்டண விகித மாற்றத்துக்கு கட்டடப் பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க வேண்டும் என்றோ, மின் இணைப்பை துண்டிக்கலாம் என்றோ எந்த வழிகாட்டுதல்களும் வழங்கப்படவில்லை. இது குறித்து தமிழக அரசின் ஒருங்கிணைந்த வளர்ச்சி மற்றும் கட்டட விதிகளில் கூட சொல்லப்படவில்லை. அதனால் மின் நுகர்வோரிடம் இருந்து மின் இணைப்பு கட்டண விகித மாற்றத்துக்கு கட்டட பணி நிறைவு சான்று சமர்ப்பிக்க தேவையில்லை, இது குறித்து கள அலுவலர்களுக்கு தக்க அறிவுறுத்தல்களை வழங்க வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Follow our Twitter Page for More Latest News Updates

TNPSC Online Classes

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here
Captcha verification failed!
CAPTCHA user score failed. Please contact us!