திருவள்ளூர் மாவட்டத்தில் ஆக. 09ம் தேதி உள்ளூர் விடுமுறை – ஆட்சியர் அறிவிப்பு!
தமிழகத்தில் வரவிருக்கும் ஆடி கிருத்திகையை முன்னிட்டு ஆக. 09 ம் தேதி திருவள்ளூர் மாவட்டத்திற்கு உள்ளூர் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
உள்ளூர் விடுமுறை:
தமிழ் மாதங்களில் ஒன்றான ஆடி மாதம் வெகு சிறப்பு வாய்ந்தது. இந்த மாதத்தில் வரும் வெள்ளிக்கிழமை, ஆடி 18ம் பெருக்கு, ஆடி அமாவாசை, பௌர்ணமி, ஆடிப்பூரம் என அனைத்தும் விசேஷ நாட்களாக உள்ளது. அந்த வரிசையில் ஆடி கிருத்திகையும் ஒன்று. இந்த நன்னாளில் தமிழ் கடவுளான முருகப் பெருமானை வழிபடுவது பலன் தரும் என்பது நம்பிக்கை. இந்த நன்னாளில் முருகன் பெருமான் ஆலயங்களில் சிறப்பு வழிபாடுகளும் நிகழ்ச்சிகளும் நடைபெறும்.
NBEMS-ல் Consultant வேலைவாய்ப்பு 2023 – விண்ணப்பிக்கலாம் வாங்க || முழு விவரங்களுடன்!
அதனால் பக்தர்கள் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகமாக இருக்கும். இந்த ஆடி கிருத்திகை விழாவை முன்னிட்டு திருவள்ளூர் மாவட்டத்திற்கு ஆக.09 ம் தேதி உள்ளூர் விடுமுறை அறிவித்து மாவட்ட ஆட்சியர் உத்தரவிட்டுள்ளார். இந்த விடுமுறை ஈடு செய்யும் வண்ணம் ஆகஸ்ட் 26 ஆம் தேதி வேலை நாளாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.