தமிழக பள்ளி & கல்லூரிகளில் அதிரடி நடவடிக்கை – சுகாதாரத்துறை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள பள்ளி மற்றும் கல்லூரிகளில் டெங்கு காய்ச்சல் பரவமல் இருக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது.
காய்ச்சல் பரவல்
தமிழகத்தில் தற்போது பள்ளிகள் திறக்கப்பட்டு மாணவர்கள் வழக்கம் போல பள்ளிக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில் அண்டை மாநிலமான கேரளாவில் தென்மேற்கு பருவமழை தொடங்கி இருக்கிறது. அதனால் டெங்கு காய்ச்சல், எலி காய்ச்சல் உள்ளிட்ட நோய் பாதிப்பு அதிகமாக பரவி வருகிறது. அதனால் இந்த காய்ச்சல் பாதிப்புகள் தமிழக எல்லையோர மாவட்டங்களில் பரவாமல் இருக்க தடுப்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
Join Our WhatsApp Group” for Latest Updates
இந்நிலையில் பள்ளிகள், கல்லூரிகள் உள்ளிட்ட கல்வி நிறுவனங்களில் இந்த காய்ச்சல் பாதிப்பு ஏற்படாமல் தடுக்க வேண்டும் என சுகாதாரத்துறை உத்தரவிட்டுள்ளது. இது குறித்து பொது சுகாதாரத் துறை இயக்குநர் செல்வ விநாயகம் அனைத்து மாவட்ட சுகாதாரத் துறை அலுவலர்களுக்கும் சுற்றறிக்கை ஒன்றை அனுப்பி இருக்கிறார். அதில் உள்ள விவரங்கள் பின்வருமாறு,
- மாநிலத்தில் அனைத்து பள்ளிகள் மற்றும் கல்லூரி வளாகங்களில் கொசு உற்பத்தி ஆகாமல் தடுக்க ஆய்வை முன்னெடுத்து அதனை ஒழிக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- மேலும் கல்வி நிறுவன நிர்வாகங்கள், உள்ளாட்சி அமைப்புகளும், அதற்கான ஒத்துழைப்பை வழங்க வேண்டும்.
- பள்ளி கல்லூரி வளாகங்களில் கொசுவை ஒழிக்க புகை மருந்து அடிக்க வேண்டும்
அரசு ஊழியர்களுக்கு HRA 3% உயர்வு… வெளியான முக்கிய தகவல்!
- மேல்நிலை மற்றும் கீழ்நிலை தொட்டிகளை சுத்தமாகவும், குளோரின் கலந்தும் பராமரிக்க வேண்டும்.
- அதனை கொசு புழுக்கள் உற்பத்தி ஆகாமல் மூடி வைக்க வேண்டும்.
- மேலும் மாணவர்களுக்கு காய்ச்சல் பாதிப்புகள் இருந்தால் உடனே துணை சுகாதார இயக்குநர்களுக்கு தகவல் தெரிவிக்கப்பட வேண்டும்.
- சிறப்பு முகாம்கள் உள்ளிட்ட தடுப்பு நடவடிக்கைகள் முன்னெடுக்கப்பட வேண்டும்.