தனியார் நிறுனவனத்தை விட ஆவின் நெய் விலை குறைவு – அமைச்சர் வெளியிட்ட முக்கிய தகவல்!
தமிழகத்தில் தனியார் நிறுவன நெய் விலையை விட ஆவின் நெய் விலைக்குறைவாக விற்கப்படுகிறது என்று அமைச்சர் மனோ தங்கராஜ் தெரிவித்துள்ளார்.
ஆவின் நெய்:
தமிழகத்தில் அண்ணா பிறந்தநாள் விழா இன்று (செப். 15) கன்னியாகுமரி மாவட்ட திமுக சார்பில் நடைபெற்றது. இந்த விழாவில் தமிழ்நாடு பால்வளத்துறை அமைச்சர் மனோ தங்கராஜ் கலந்து கொண்டார். அப்போது பேசிய அமைச்சர் தனியார் நிறுவன நெய் விலையை விட ஆவின் நெய் விலை குறைவாக விற்கப்படுகிறது. அதாவது தனியார் நெய் 960 ரூபாய் முதல் ஆயிரம் ரூபாய் வரை விற்பனை செய்யப்படுகிறது.
பாலியல் வன்கொடுமையால் பாதிக்கப்பட்டுள்ள பெண்களுக்கு ரூ.10 லட்சம் இழப்பீடு – அரசு ஒப்புதல்!
ஆனால் ஆவின் நெய் ரூ.700க்கு விற்பனை செய்யப்படுகிறது என தெரிவித்துள்ளார். இந்த நிகழ்ச்சியில் நாகர்கோவில் மாநகராட்சி மேயர் உட்பட ஏராளமானவர்கள் கலந்து கொண்டிருக்கின்றனர். மக்களுக்கு ஆவின் மூலம் தரமான பொருள்கள் குறைந்த விலையில் விற்பனை செய்ய வேண்டும் என அமைச்சர் ஏற்கனவே தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.