ரேஷன் கடைகளில் அரிசி-கோதுமை நிறுத்தம் – காரணம் என்ன? முழு விவரங்களுடன்!
நாடு முழுவதும் ‘இவர்களுக்கு’ ரேஷன் கடைகளில் வரும் 1ம் தேதி முதல் அரிசி-கோதுமை நிறுத்தப்படவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அரிசி-கோதுமை நிறுத்தம்:
நாடு முழுவதும் ரேஷன் கடைகளில் மானிய விலையில் மக்களுக்கு பொருட்கள் விநியோகிக்கப்படுகிறது. ஆனால் சமீப காலமாக இதில் முறைகேடுகள் அதிகரித்து வருவதால், அதனை தடுக்க புதிய நடவடிக்கை ஒன்றை எடுத்தது. அதாவது மக்கள் தங்களின் ஆதார் கார்டை ரேஷன் கார்டு உடன் இணைக்க வேண்டும். அப்படி இல்லை என்றால் அவர்களுக்கு இந்த நியாயவிலைக் கடையின் எந்த சேவையும் வழங்கப்படமாட்டாது.
தமிழகத்தில் நாளை (மே 15) மின்தடை அறிவிப்பு – உஷாரா இருங்க!
இதனை மத்திய அரசு தொடர்ச்சியாக வலியுறுத்தி வரும் நிலையில், அதற்கான அவகாசமும் தொடர்ந்து நீடிக்கப்பட்டு வருகிறது. முன்னதாக மார்ச் 31 வரை வழங்கப்பட்டு இருந்த அவகாசம் தற்போது ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. அதற்குள் ரேஷன் அட்டைதாரர்கள் தத்தம் ஆதார் கார்டை ரேஷன் கார்டுடன் இணைத்திட வேண்டும். அப்படி செய்யவில்லை என்றால், அவர்களுக்கு ஜூலை 1 முதல் அரிசி, கோதுமை போன்ற எந்த ஒரு பொருளும் கிடைக்காது என்று எச்சரித்துள்ளது.
Exams Daily Mobile App Download