தமிழகத்தில் நாளை (மே 15) மின்தடை அறிவிப்பு – உஷாரா இருங்க!
தமிழக அரசின் உத்தரவின் படி நாளை மின்தடை செய்யப்பட உள்ள துணை மின் நிலையங்களின் பட்டியல் தற்போது வெளியிடப்பட்டுள்ளது.
மின்தடை:
மின்வாரியம் மற்றும் மின் வாரியத்திற்குட்பட்ட இயந்திரங்களில் முறையான பராமரிப்பை மேற்கொள்வதன் மூலம் தேவையற்ற மின் விபத்துகளையும், எதிர்பாராத மின்தடையையும் தவிர்த்துக் கொள்ளலாம். இதனால், தமிழகம் முழுவதும் உள்ள அனைத்து பகுதிகளுக்கும் முன்கூட்டியே தகுந்த முன் அறிவிப்பு வழங்கப்பட்டு பகுதி வாரியாக மின்தடை செய்யப்படுகிறது. இந்நிலையில், நாளை மின்தடை செய்யப்பட உள்ள பகுதிகளின் பட்டியல் கீழே கொடுக்கப்பட்டுள்ளது.
மின்தடை பகுதிகள்:
வால்பாறை:
ஐயர்பாடி, வால்பாறை, அட்டகட்டி, குறுங்குமுடி, தாய்முடி, காடம்பாறை, ரொட்டிக்கடை, நீர்வீழ்ச்சி, சின்னகல்லாறு, பெரியகல்லாறு, முடிகள், உருளிகள், சோலையார் நகர், சின்கோனா, மானாம்பள்ளி மற்றும் சுற்றுப்புற பகுதிகள்.
மல்லாங்கிணறு:
வலையங்குளம், நந்திக்காடு, நாகம்பட்டி, மேலத்துலுப்ளாங்குளம்.
பெருந்தரை:
விஜயமங்கலம், பகலையூர், புலவர்பாளையம், கல்லியம்புதூர், வீரசங்கிலி, பழகவுண்டம்பாளையம், குணம்பட்டி, மாச்சபாளையம், ஆலாம்பாளையம், வேப்பம்பாளையம், கந்தப்பங்கவுண்டன்புதூர், சாமியார்பாளையம், சாம்ராஜ்பாளையம்
குன்றத்தூர்:
இரண்டம் கட்டளை, மேல்மா நகர், புத்தவேடு, சாதனந்தபுரம், கரைமாநகர், ஆண்டங்குப்பம், மணிகண்டா நகர், மெட்ரோ ஸ்டார்சிட்டி மற்றும் அன்னை தெரசா நகர்
ஈரோடு:
பேரோடு, குமிளம்பரப்பூர், கொங்கம்பாளையம், மேட்டையன்காடு, கொளத்துப்பாளையம், சடையம்பாளையம், தாயர்பாளையம், ஆட்டையாம்பாளையம், பள்ளிபாளையம், புதுவலசு கங்காபுரம், டெக்ஸ்வேலி, மொக்கையம்பாளையம், சூரிப்பாறை, கரட்டுப்பாளையம்
தூத்துக்குடி, டவுன், பீச்ரோடு :
இனிகோநகர், கோவில்பிள்ளை நகர், உப்போடை, வடக்கு கடற்கரை சாலை, ஜெரோஜ் சாலை
கோயம்புத்தூர்:
சி.ஏ.கோயில், வடுகபாளையம், ஆலாம்பாளையம், புதுப்பாளையம், செங்காலிபாளையம்
Exams Daily Mobile App Download