ஆதார் – பான் இணைப்பிற்கு காலக்கெடு நீட்டிப்பு? தபால் நிலையத்திலேயே இணைக்கலாம்.. விவரம் இதோ!
பான் – ஆதார் கார்டு இணைப்பிற்கான கால அவகாசம் பலமுறை நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில் தற்போது மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும் என்று அரசுக்கு கோரிக்கைகள் எழுந்து வருகிறது.
பான் – ஆதார் இணைப்பு:
ஒரு நபருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட இடங்களில் பான் கார்டுகள் அளிக்கப்படுவதை தடுக்க அனைவரும் தங்கள் பான் கார்டை ஆதார் கார்டுடன் இணைக்க வேண்டும் என்று உத்தரவிட்டது. கடந்த 2019 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை இதற்காக பலமுறை கால அவகாசங்கள் நீட்டிக்கப்பட்டது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில் காங்கிரஸ் எம்பி அவர்கள் மத்திய அமைச்சகத்துக்கு பான் – ஆதார் இணைப்பிற்கு மேலும் கால அவகாசம் அளிக்க வேண்டும். மேலும் கிராமப்புற மக்களுக்கு தபால் நிலையங்களில் இதற்கான வழிமுறைகளை செய்ய வேண்டும்.
டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி இடமாறுதல் – கலந்தாய்வு மூலம் ஆணை!
மக்களுக்கு இலவசமாக இணைப்பை அளிக்க அரசு முன்வர வேண்டும் என்று கோரிக்கை அனுப்பினார். இதற்கு மத்திய நிதி துறை இணை அமைச்சர் பங்கஞ் சௌத்ரி அவர்கள், இதற்கு மேல் கால அவகாசம் நீட்டிப்பது சாதியமில்லை என்றும், பான் ஆதார் இணைப்புக்காக கட்டணத்தை விலக்குவது இதற்கு முன்னராக கட்டணம் செலுத்திய மக்களுக்கு அநீதியாக இருக்கும் என்றும் தெரிவித்துள்ளார்.