டாஸ்மாக் கடை ஊழியர்கள் பணி இடமாறுதல் – கலந்தாய்வு மூலம் ஆணை!
தமிழகத்தில் மூடப்பட்ட டாஸ்மாக் கடைகளில் பணியாற்றிய ஊழியர்களுக்கு கவுன்சிலிங் அடிப்படையில் பணி மாறுதல் வழங்கப்பட்டுள்ளது.
பணியிட மாறுதல்:
தமிழகத்தில் மதுக்கடைகளை மூட வேண்டும் என்றும் முழு மதுவிலக்கை அமல்படுத்த வேண்டும் என்றும் பொதுமக்கள் மற்றும் அரசியல் கட்சியினரும் பல ஆண்டுகளாக அரசுக்கு கோரிக்கை விடுத்து வருகின்றனர். இந்த நிலையில் தமிழகத்தில் இயங்கும் 5,329 மதுபான விற்பனை கடைகளில் 500 கடைகள் மூடப்படும் என சட்டப்பேரவையில் அமைச்சர் செந்தில் பாலாஜி அறிவித்தார். அதன் அடிப்படையில் உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டு பொதுமக்கள் அளித்த புகாரின் அடிப்படையில் மதுக்கடைகள் கண்டறியப்பட்டு அவற்றில் 500 மதுக்கடைகள் கடந்த ஜூன் 22ஆம் தேதி முதல் மூடப்பட்டது.
மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசின் விளக்கம் இது தான்!
இந்த 500 மதுபான கடைகளில் பணியாற்றி வந்த ஊழியர்களுக்கு பணியிட மாறுதல் வழங்கப்படும் என அரசு அறிவித்தது. அதன்படி முதன் முறையாக எந்த வகையான பரிந்துரையும் இன்றி கவுன்சிலிங் அடிப்படையில் 2444 பேருக்கு பணி மாறுதல் ஆணை அரசு வழங்கியுள்ளது. அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் அவர்களின் முயற்சியால் இந்த கலந்தாய்வு வெளிப்படை தன்மையுடன் நடைபெற்றது.