மத்திய அரசு ஊழியர்களுக்கு பழைய ஓய்வூதிய திட்டம் அமல்? அரசின் விளக்கம் இது தான்!
இந்தியாவில் மத்திய அரசு மற்றும் மாநில அரசு ஊழியர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது ஓய்வூதிய திட்டம் மாற்றப்பட வேண்டும் என்பது தான், இது குறித்து அரசு விளக்கம் அளித்துள்ளது.
ஓய்வூதிய திட்டம் மாற்றம்
நாடு முழுவதும் அரசு ஊழியர்களின் ஒரே கோரிக்கையாக இருப்பது புதிய ஓய்வூதிய திட்டத்தை ரத்து செய்து, பழைய ஓய்வூதிய திட்டம் அமல்படுத்த வேண்டும் என்பது தான். இதற்கு ஒரு சில மாநில அரசுகள் ஒப்புதல் அளித்து, தங்களுடைய அரசு ஊழியர்களுக்கு ஓய்வூதிய திட்டத்தை மாற்றி, அதன் பலன்களை வழங்கி வருகிறது.
Follow our Instagram for more Latest Updates
அந்த வகையில் லோக்சபா தேர்தல் நடைபெறவுள்ள நிலையில், அரசுக்கு இது பெரிய பிரச்சனையாக இருக்கிறது. அதனால் மத்திய அரசு ஊழியர்களின் ஓய்வூதியத் திட்டத்தில் என்ன மாற்றம் வருமா? என்ற கேள்விக்கு அரசு விளக்கம் அளித்துள்ளது. இது குறித்து மத்திய நிதித்துறை இணையமைச்சர் பங்கஜ் சவுத்ரி, நாடாளுமன்றத்தில் நேற்று எழுத்துப்பூர்வமாக பதில் அளித்தார். அதாவது, தற்போதைய ஓய்வூதியத் திட்டமான புதிய ஓய்வூதிய திட்டம் மாறாது என தெரிவித்துள்ளார்.
தமிழக பத்திரப்பதிவு துறையில் ஒரே ஆண்டில் ரூ.17,253 கோடி வசூல் – அறிவிப்பு வெளியீடு!
மேலும் கடைசி சம்பளத்தில் 40-45 சதவீதத்தை ஓய்வூதியமாக வழங்குவதை உறுதி செய்வதற்காக தற்போதுள்ள புதிய ஓய்வூதியத் திட்டத்தை மாற்ற மத்திய அரசு திட்டமிட்டுள்ளதா? என அமைச்சர் ஒருவர் கேட்ட கேள்விக்கு, மத்திய நிதித்துறை அமைச்சர் அப்படி திட்டம் எதுவும் பரிசீலிக்கப்படவில்லை என விளக்கம் அளித்துள்ளார்.