தமிழக பத்திரப்பதிவு துறையில் ஒரே ஆண்டில் ரூ.17,253 கோடி வசூல் – அறிவிப்பு வெளியீடு!
தமிழகத்தில் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணம் உயர்த்தப்பட்டுள்ள நிலையில் இந்த நிதியாண்டில் மட்டுமே ரூ.17,253 கோடி வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது.
பத்திரப்பதிவு துறை:
தமிழகத்தில் பத்திரப்பதிவுகளுக்கு வரும் பொதுமக்களுக்கு வசதிகளை மேம்படுத்தல் மற்றும் போலி பத்திரப்பதிவுகளை தடுத்தல் உள்ளிட்ட பல்வேறு நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. மேலும், சமீபத்தில் பத்திரப்பதிவு சேவைகளுக்கான கட்டணமும் 20 ஆண்டுகளுக்குப் பிறகு இரண்டு மடங்காக உயர்த்தப்பட்டுள்ளது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now
அதாவது, அதிகபட்ச பத்திரத் தீர்வைகளுக்கான கட்டணம் ரூபாய் 40,000 தனிமனை பதிவிற்கான கட்டணம் ரூபாய் 1000 ஆக அதிகரிக்கப்பட்டுள்ள நிலையில் இந்த நிதியாண்டில் மட்டுமே பத்திரப்பதிவுத் துறையில் ஏகப்பட்ட வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது
பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – நியூயார்க் நகர மேயர் உத்தரவு!
அதாவது, தமிழக அரசின் சார்பில் மேற்கொள்ளப்பட்டு வரும் நடவடிக்கைகளின் அடிப்படையில் கடந்த ஜூலை முதல் இந்த நிதியாண்டு ஜூலை மாதம் வரையில் மட்டுமே 17,253 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளதாக அறிவிப்பு வெளியாகி இருக்கிறது. மேலும், கடந்த நிதியாண்டுடன் ஒப்பிடுகையில் இந்த ஆண்டு இரட்டிப்பு வருமானம் கிடைத்துள்ளதாக அப்டேட் வெளியிடப்பட்டிருக்கிறது.