பிளாஸ்டிக் பயன்பாட்டிற்கு கடும் கட்டுப்பாடுகள் விதிப்பு – நியூயார்க் நகர மேயர் உத்தரவு!
அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்பாட்டிற்கு தடைவிதித்து நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். இத்தகவல் நகர் முழுவதும் அதிவேகத்தில் பரவி வருகிறது.
பிளாஸ்டிக் பயன்பாடு:
நவீன காலத்தில் அதிகரித்து வரும் பிளாஸ்டிக் பொருட்களின் பயன்பாடு நிலத்தின் சுற்றுச்சூழலை முற்றிலும் பாதிக்கிறது. பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கான காலம் மிகவும் அதிக அளவில் எடுத்துக் கொள்கிறது. இதனால் நிலத்தின் வளங்கள் அனைத்தும் அழிந்து வரும் நிலை காணப்படுகிறது. ஒரு முறை மட்டுமே பயன்படுத்தும் பிளாஸ்டிக் பொருட்கள் மக்குவதற்கு கூட நாம் நினைத்து பார்க்க முடியாத அளவிற்கு நீண்ட காலம் எடுத்துக் கொள்ளப்படுகிறது.
Follow our Instagram for more Latest Updates
இந்நிலையில் தற்போது அமெரிக்காவின் நியூயார்க் நகரத்தில் ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதித்து நகர மேயர் உத்தரவிட்டுள்ளார். குறிப்பாக அமெரிக்காவில் ஆண்டிற்கு 32 கோடி டன்கள் பிளாஸ்டிக் பொருட்கள் பயன்படுத்தப்படுவதாகவும், இதில் 95% ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் குப்பைகள் என்று நுகர்வோர் மற்றும் தொழிலாளர் பாதுகாப்பு கமிட்டி அறிக்கை வெளியிட்டுள்ளது.
தமிழகத்தில் தக்காளி விலை குறைவா? இன்றைய விலை நிலவரம் இதோ!
இதன் விளைவாகவே ஒருமுறை மட்டுமே பயன்படுத்தப்படும் பிளாஸ்டிக் பொருட்களுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. மேலும் உணவகங்கள் மற்றும் மற்ற நிறுவனங்களில் வாடிக்கையாளர்கள் கேட்காமல் பிளாஸ்டிக் ஸ்பூன், டப்பாக்கள் போன்றவற்றை கொடுக்கக் கூடாது என்றும், இதனை மீறும் நிறுவனங்களுக்கு 20 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.