ஆதாரை செப். 14 -க்கும் அப்டேட் பண்ணுங்க… இல்லையெனில் சலுகை கிடையாது.. அரசு அறிவிப்பு!
இந்தியாவில் முக்கிய அடையாள ஆவணமாக விளங்கும் ஆதார் அட்டையை புதுப்பிப்பதற்கான காலக்கெடு நீட்டிக்கப்பட்டுள்ளது.
ஆதார் அப்டேட்:
இந்தியாவில் அரசின் நலத்திட்டங்களை பெறுவதற்கும் இன்று ஆதார் கார்டு முக்கிய ஆவணமாக உள்ளது. அதனால் இந்திய தனித்துவ அடையாள ஆணையம் ஆதாரில் உள்ள விவரங்களை 10 வருடங்களுக்கு ஒரு முறை புதுப்பிக்க உத்தரவிட்டுள்ளது. மேலும் ஆன்லைனில் இலவசமாக ஆதார் அட்டையை புதுப்பித்துக் கொள்ளும் வாய்ப்பையும் வழங்கியுள்ளது. இந்த நிலையில் புதுவையில் அரசின் நலத்திட்டங்களுக்கு ஆதார் அவசிய ஒன்றாக இருப்பதால் பொதுமக்கள் விரைந்து புதுப்பிக்க அறிவுறுத்தப்பட்டுள்ளது.
தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நாளை (செப்.1) முதல் உறுதிமொழி மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
இது தொடர்பாக திட்டம் மற்றும் ஆராய்ச்சித்துறை வெளியிட்டுள்ள செய்தி குறிப்பில், ஆதார் தகவல்களை எப்போதும் பொதுமக்கள் புதுப்பித்து வைத்துக் கொள்ள வேண்டியது அவசியம் ‘my aadhar’ என்ற இணையதளம் வாயிலாக ஆதார் விவரங்களை புதுப்பிக்க கால அவகாசம் செப். 14 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.