தமிழகத்தில் அரசுப் பள்ளிகளில் நாளை (செப்.1) முதல் உறுதிமொழி மாற்றம் – பள்ளிக்கல்வித்துறை உத்தரவு!
தமிழகத்தில் உள்ள அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது. இது குறித்த முழு விவரங்களை பற்றி பார்க்கலாம்.
பள்ளிகளில் உறுதிமொழி:
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் அரசு பல மாற்றங்களை செய்து மாணவர்களை நல்ல வழியில் கொண்டு செல்கிறது. குறிப்பாக அரசுப் பள்ளிகளில் மாணவர்கள் நல்லொழுக்கத்தை மேம்படுத்த சில கட்டுப்பாடுகளை அரசு அறிவித்துள்ளது. அந்த வகையில் தற்போது அரசு பள்ளிகளில் புதிதாக உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவு பிறப்பித்துள்ளது.
வால்பாறையில் அத்துமீறும் சுற்றுலா பயணிகள் – கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.. எச்சரிக்கும் வனத்துறை!
அதாவது அரசு பள்ளி மாணவர்கள் காலை உறுதிமொழி எடுக்கும் போது எங்கள் பள்ளி, மிளிரும் பள்ளி என்ற தலைப்பில் உறுதிமொழி எடுக்க பள்ளிக்கல்வித்துறை உத்தரவிட்டுள்ளது. இந்த புதிய உத்தரவு நாளை செப்.1 முதல் ஒவ்வொரு வாரமும் பள்ளித்தூய்மை உறுதிமொழி எடுத்துக் கொள்ள வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது. இந்த உத்தரவை அனைத்து பள்ளிகளிலும் கடைபிடிக்க வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
Join Our WhatsApp Group” for Latest Updates