ஆதார் – பான் எண் இணைப்பு தவறா? அப்போ உடனே இதை செய்யுங்க.. முழு விவரம் இதோ!
தவறான பான் கார்டுடன் ஆதார் எண் இணைக்கப்பட்டு இருந்தால் இனி கவலை பட தேவையில்லை அதனை ஆன்லைன் வாயிலாக எளிதாக சரி செய்து கொள்ளலாம்.
ஆதார் – பான் எண் இணைப்பு:
இந்தியாவில் வரியை தடுக்கும் வகையில் வருமான வரித்துறையினரால் வழங்கப்பட்டு வருகிறது. இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இந்த பான் கார்டுடன் ஆதார் எண்ணை இணைக்க மத்திய அரசு உத்தரவிட்டுள்ளது. இதன் வாயிலாக போலி ஆதார் மற்றும் பான் கார்டு பயன்பாடு தடுக்கப்படும்.
தமிழகத்தில் மே 2 ஆம் தேதி அமைச்சரவை கூட்டம் – முக்கிய அறிவிப்பு வெளியீடு!
மேலும் பான் கார்டு வாயிலாக நடைபெறும் பணம் மோசடிகள் கண்டறியப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போது ரூ.1000 அபராதத்துடன் ஆதார் – பான் இணைப்பு பணிகள் நடைபெற்று வருகிறது. நடப்பு ஆண்டு அபராதத்துடன் மார்ச் 31 2023 வரை பான் – ஆதார் இணைப்புக்கு கால அவகாசம் வழங்கப்பட்டது.
தற்போது இந்த கால அவகாசம் ஜூன் 30 வரை நீட்டிக்கப்பட்டுள்ளது. இந்த பான் – ஆதார் இணைப்பின் போது சில நேரங்களில் தொழில்நுட்ப கோளாறு போலி ஆதார் மற்றும் பான் எண் போன்ற காரணங்களால் ஆதாருடன் தவறான பான் கார்டு எண் இணைக்கப்படுகிறது. இதனை சரி செய்ய முதலில் ஆதார் மற்றும் பான் எண்ணை ‘delink’ செய்ய வேண்டும்.