ரேஷன் கார்டில் புதிய பெயரை சேர்க்க வேண்டுமா? அப்போ இந்த ஆவணம் கட்டாயம் தேவை!
தமிழகத்தில் ரேஷன் கார்டில் புதிய பெயர்களை சேர்க்க ஆதார் கார்டு அவசியம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. 5 வயதுக்கு மேற்பட்ட குழந்தைகளின் ஆதார் எண் இணைக்கப்படாமல் இருந்தால் இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.
ஆதார் – ரேஷன்:
தமிழகத்தில் சமீப காலமாக புதிய ரேஷன் கார்டு வேண்டி விண்ணப்பிப்பவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகிறது. இந்த நிலையில் தமிழக உணவு வழங்கல் துறை ஆன்லைன் வாயிலாக புதிய ரேஷன் கார்டுக்கு ஆன்லைன் வாயிலாக விண்ணப்பிக்க வழிவகை செய்துள்ளது. புதிய ரேஷன் கார்டுக்கு மட்டுமின்றி ரேஷன் கார்டில் பெயர் மற்றும் முகவரி மாற்றம் போன்ற வேலைகளையும் ஆன்லைன் வாயிலாகவே செய்து கொள்ளும் வசதி அளிக்கப்பட்டுள்ளது.
பள்ளிகளுக்கு விடுமுறை நீட்டிப்பு – மாநில அரசு வெளியிட்ட முக்கிய அறிவிப்பு!
இந்த நிலையில் ஆதாரில் புதிய பெயர்களை சேர்க்க ஆதார் கார்டு கட்டாயம் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இதில் 5 வயதிற்கு கீழ் உள்ள குழந்தைகளுக்கு மட்டும் ஆதார் கார்டு தேவையில்லை. பிறப்பு சான்றிதழ் இருந்தால் மட்டும் போதுமானது .மேலும் குழந்தைக்கு 5 வயது ஆன பிறகு ரேஷன் கார்டில் ஆதாரை இணைக்க வேண்டும் என்று அறிவுறுத்தப்பட்டுள்ளது.