மோசடிகளை தடுக்கும் புதிய யுக்தி – என்னனு தெரியுமா?
நாளுக்கு நாள் வளர்ந்து வரும் தொழில்நுட்பத்தின் காரணமாக நாடு வளர்ச்சியை நோக்கி நகர்கிறது. அதே சமயம் நூதன முறையில் நடைபெறும் மோசடிகளும் அதிகரித்து வருகிறது. போலியான பரிசுகள் வழங்குவது, ATM அட்டை Lock ஆகியுள்ளது என்று கூறி பல காலமாக மோசடிகள் நடத்தப்பட்டு வந்தது. வாடிக்கையாளரின் கிரெடிட் கார்டு விவரங்கள் மோசடி பேர்வழிகள் வசம் சிக்காமல் இருக்க, ஆன்லைன் பரிவர்த்தனையின் போது, கிரெடிட் கார்டு எண்களை பதிவிடுவதற்கு பதிலாக கைரேகை, ஃபேஸ் ஸ்கேன் மூலம் பண பரிவர்த்தனைகளை அங்கீகரிக்க மாஸ்டர் கார்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளது.
பாஸ்ட்டேக் யூஸ் பண்றீங்களா? இதை கவனிங்க!
தற்போது, செல்போன் அல்லது இ-மெயிலுக்கு அனுப்பப்படும் ஒ.டி.பி. எண்களையும் ஹேக்கர்கள் திருடி விடுவதால் வாடிக்கையாளர்கள் பணத்தை இழக்க நேரிடுகிறது. இதனால், வங்கிகளுடன் இணைந்து பயோமெட்ரிக் சரிபார்ப்பு முறையை அறிமுகப்படுத்த மாஸ்டர் கார்டு நிறுவனம் முடிவெடுத்துள்ளது.

























