தமிழகத்தில் 10, 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை – அமைச்சர் செங்கோட்டையன் விளக்கம்!!
தமிழகத்தில் 10 மற்றும் 12ம் வகுப்பு பொதுத்தேர்வு அட்டவணை வெளியீடு குறித்து முக்கிய அறிவிப்பை பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் இன்று செய்தியாளர்கள் சந்திப்பில் தெரிவித்து உள்ளார்.
பொதுத்தேர்வு அட்டவணை:
ஈரோடு மாவட்டம் கோபிச்செட்டிபாளையத்தில் அரசின் கட்டிட மற்றும் சாலை பணிகளை துவக்கி வைத்த பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் செங்கோட்டையன் அவர்கள் செய்தியாளர்களை சந்தித்தார். அவர் பேசுகையில், மத்திய அரசின் நிதி உதவியோடு 6 முதல் 8ம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு டேப் வழங்க நடவடிக்கை எடுக்கப்படுகிறது. 2017-18ம் கல்வியாண்டில் பயின்ற மாணவர்களுக்கு லேப்டாப் வழங்கப்படும்.
தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து நடவடிக்கை – முதல்வர் அறிவிப்பு!!
இருப்பினும் 9, 10ம் வகுப்புகளில் பயிலும் மாணவர்களுக்கு மடிக்கணினி வழங்கப்படாது. 6 முதல் 8ம் வகுப்பு வரையில் தற்போதைக்கு பள்ளிகள் திறக்கப்படாது, முதல்வருடன் கலந்தாலோசித்த பின்னரே அது குறித்து முடிவெடுக்கப்படும். நடப்பு கல்வியாண்டு முதல் ஆண்டுக்கு இருமுறை நீட் தேர்வு நடத்துவது குறித்து மத்திய அரசிடம் இருந்து அறிவிப்பு பெறப்பட்ட பின்னரே முடிவு செய்யப்படும்.
TN Job “FB Group” Join Now
இந்திய தலைமை தேர்தல் அதிகாரி உடன் தேர்தல் ஆலோசனை கூட்டம் இன்று நடைபெற உள்ளது. அதில் சட்டமன்ற தேர்தல் தேதி குறித்து முடிவு செய்யப்பட்ட பின்னரே 10 மற்றும் 12ம் வகுப்பு மாணவர்களுக்கான பொதுத்தேர்வு அட்டவணை அறிவிப்பு வெளியிடப்படும் என தெரிவித்தார். மேலும் ஆசிரியர் காலிப்பணியிடங்கள் நிரப்புவது குறித்த தேர்வு அட்டவணை விரைவில் வெளியாகும் எனவும் அமைச்சர் கூறி உள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்