தமிழகத்தில் கல்விக்கடன் ரத்து நடவடிக்கை – முதல்வர் அறிவிப்பு!!
தமிழக மாணவர்களின் கல்விக்கடன்களை ரத்து செய்ய உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் இன்று நடைபெற்ற தேர்தல் பிரச்சார பரப்புரையில் அறிவித்து உள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
கல்விக்கடன் ரத்து:
தமிழக விவசாயிகள் கூட்டுறவு வங்கிகளில் பெற்றுள்ள ரூ.12,110 கோடி மதிப்பிலான பயிர்க்கடன் ரத்து செய்யப்படுவதாக சட்டப்பேரவை கூட்டத்தொடரின் போது முதல்வர் எடப்பாடி பழனிசாமி அவர்கள் 110வது விதியின் கீழ் அறிவித்தார். இதற்கு மிகப்பெரிய வரவேற்பு கிடைத்தது. தொடர்ந்து இந்த உத்தரவின் அரசாணையும் வெளியிடப்பட்டது. மேலும் பயிர்க்கடன் ரத்து செய்யப்பட்டதற்கான ரசீது இன்னும் 10 நாட்களுக்குள் விவசாயிகளுக்கு கிடைக்கும் எனவும் முதல்வர் தெரிவித்தார்.
தமிழகத்தில் 6 முதல் 8ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு இல்லை – அமைச்சர் செங்கோட்டையன்!!
இன்று அவிநாசியில் தேர்தல் பிரச்சாரத்தில் ஈடுபட்ட முதல்வர் அவர்கள், அரசின் நலத்திட்டங்கள் குறித்து எடுத்துரைத்தார். பின்னர் அங்கு கூடியிருந்த கல்லூரி மாணவர்கள், கல்விக்கடனை ரத்து செய்ய வேண்டும் என முதல்வரிடம் கோரிக்கை வைத்தனர். இதற்கு பதிலளித்த அவர், மாணவர்களின் எதிர்காலம் தான் நமது நாட்டின் எதிர்காலம். எனவே மாணவர்களின் கல்விக்கடனை ரத்து செய்யவும் உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என அறிவித்து உள்ளார். இதனால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்