தமிழகத்தில் நாளை மின் தடை ஏற்பட உள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
துணை மின் நிலையங்களில் மின் பராமரிப்பு பணிகள் நடைபெறும் போது மின் ஊழியர்கள் நலன் கருதி மின் விநியோகம் தடை செய்யப்படுகிறது. மின் தடை செய்யப்படுவதால் பொதுமக்கள் பாதிக்கப்படக் கூடாது என்பதற்காக முன்கூட்டியே அந்தந்த பகுதி செயற்பொறியாளர் மக்களுக்கு மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த விவரங்களை தெரிவித்து வருகின்றனர்.கடந்த மார்ச் மாதம் முதல் பொதுத் தேர்வை முன்னிட்டு தமிழகத்தில் மின்தடை செய்யப்படுவது முழுவதும் தவிர்க்கப்பட்டு வருகிறது.
தமிழகத்தில் 17 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – இதில் உங்க மாவட்டம் இருக்கா பாருங்க!
தேர்வுகள் முடிவடைந்த நிலையில் நாளை தமிழகம் முழுவதும் நாளை மின்தடை ஏற்படும் பகுதிகள் குறித்த பட்டியல் வெளியாகியுள்ளது. திருவண்ணாமலையில் மாவட்டத்தில் சேத்துப்பட்டு, நெடுங்குணம், மேல்வில்லிவலம், வேப்பம்பட்டு, கோணமங்கலம், வேளுகம்பட்டு.நந்தியம்பாடி, மருத்துவம்பாடி, இடையான்குளத்தூர், நம்பேடு, கரிப்பூர், தத்தனூர், கெங்கைசூடாமணி, உலகம்பட்டு, கூடுவாம்பாடி, மோடிபட்டு, பரிதிபுரம், ஒதலவாடி, ஊத்தூர், கிழக்குமேடு, கொத்தந்தவாடி, தேவிகாபுரம், தச்சம்பாடி, முடையூர், ஆத்துரை, நரசிங்கபுரம், தும்பூர், தேவிமங்கலம் மற்றும் சுற்றியுள்ள பகுதிகளில் காலை 9 மணி முதல் மாலை 4 மணி மின் நிறுத்தம் செய்யப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.























