தத்தளிக்கும் தலைநகரம்…!! அம்மா உணவகங்களில் உணவு இலவசம்…!! முதல்வர் அறிவிப்பு..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வந்த ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் நேற்று புயலாக வலுப்பெற்றது. இதனால், தமிழகத்தின் பெரும்பாலான பகுதிகளில் மழை பெய்து வருகிறது. மேலும், சென்னை உள்ளிட்ட கடலோர மாவட்டங்களில் பலத்தகாற்றுடன் கனமழை பொழிந்து வருகிறது. இதனால், சென்னையின் பெரும்பாலான பகுதிகளில் வெள்ள நீர் சூழ்ந்து உள்ளது.
இதனால், சென்னையை முழுவதும் உள்ள “அம்மா உணவகங்களில்” இன்று இலவச உணவு வழங்கப்படும் என முதல்வர் ஸ்டாலின் அறிவித்துள்ளார். மேலும்,மருத்துவ முகாம்களை நடத்தவும், அரசு மருத்துவமனைகளில் போதுமான மருந்துகளுடன் பொது மக்களுக்கு மருத்துவ சேவை வழங்கவும் உத்தரவிட்டுள்ளார். மேலும், மிக அத்தியாவசிய தேவைகள் தவிர வேறு காரணங்களுக்காக வீட்டை விட்டு வெளியேறுவதை தவிர்க்கவேண்டும் எனவும், புயலை வேடிக்கை பார்க்க எக்காரணம் கொண்டு கடற்கரைக்கு செல்லக்கூடாது என அறிவுறுத்தியுள்ளார்.


























