மாநிலம் முழுவதும் ரயில் மற்றும் பேருந்து சேவைகள் நிறுத்தம்..!! ” அரசு அதிரடி அறிவிப்பு”..!!
தென்மேற்கு வங்கக்கடலில் நிலவி வரும் ஆழ்ந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் “ஃபெஞ்சல்” புயலாக வலுப்பெற்றுள்ள நிலையில், பல்வேறு மாவட்டங்களில் சூறைக்காற்றுடன் கூடிய கனமழை பெய்து வருகிறது. இதனால், தற்போது ரயில் சேவைகள் நிறுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
தத்தளிக்கும் தலைநகரம்…!! அம்மா உணவகங்களில் உணவு இலவசம்…!! முதல்வர் அறிவிப்பு..!!
அதாவது , சென்னை மற்றும் அதன் புறநகர் பகுதிகளில் பலத்த புயல் காற்றுடன் தொடர்ந்து கனமழை பெய்து வருவதால் பல்வேறு கட்டுப்பாடுகளை தமிழக அரசு விதித்துள்ளது. மேலும், புயல் காற்று மணிக்கு 75 கி. மீ வேகத்தில் வீசுவதால், நண்பகல் 12.15 மணியில் இருந்து சென்னை கடற்கரை-வேளச்சேரி செல்லும் புறநகர் ரயில் சேவை தற்காலிகமாக நிறுத்தப்படுவதாக தெற்கு ரயில்வே தெரிவித்துள்ளது. இதைத்தொடர்ந்து, புதுச்சேரியில் பலத்த காற்று வீசி வருவதால், புதுச்சேரியில் இருந்து மற்ற நகரங்களுக்கு செல்லும் பேருந்து சேவைகள் தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளதாக அம்மாநில அரசு தகவல் தெரிவித்துள்ளது.


























