
தீபாவளியை முன்னிட்டு மதுரைக்கு சிறப்பு ரயில்…!! ஆன்லைன் புக்கிங் START..!! அப்போ எதுக்கு வெயிட் பண்றீங்க..
தீபாவளி பண்டிகையை முன்னிட்டு மக்கள் அவர்களின் சொந்த ஊர்களுக்கு செல்ல வேண்டும் என்பதற்காக அரசு பல்வேறு முன்னேற்பாடுகளை செய்து வருகிறது. இந்நிலையில், அக்டோபர் 29, 30 மற்றும் நவம்பர் 2 ஆகிய மூன்று தேதிகளில் தாம்பரத்தில் இருந்து மதுரைக்கு சிறப்பு ரயில்கள் இயக்கப்படும் என்றும், இத்தகைய ரயில் தாம்பரத்தில் இருந்து மாலை 5.10 மணிக்கு புறப்பட்டு விழுப்புரம், திருச்சி , திண்டுக்கல் வழியாக நள்ளிரவு 1.20க்கு மதுரை சென்றடையும் என தெற்கு ரயில்வே அறிவித்துள்ளது. மேலும், இதற்கான ஆன்லைன் பதிவுகள் இன்னும் சற்று நேரத்தில் தொடங்க உள்ளதாகவும் தெரிவித்துள்ளது.
தீபாவளியை முன்னிட்டு வாகன ஓட்டிகளுக்கு சுங்கச்சாவடியில் இலவசம்..!! தேசிய நெடுஞ்சாலை ஆணையம் தகவல்..!!

























