திட்டமிட்டு தவிர்க்கப்பட்டதா தமிழ்த்தாய் வாழ்த்து வரிகள்?? ஆளுநர் ரவி பங்கேற்ற விழாவில் சர்ச்சை!!
தூர்தர்ஷன் தொலைக்காட்சி நிலையத்தில் இந்தி மாதக் கொண்டாட்டங்களின் நிறைவு விழாவும், பொன்விழா கொண்டாட்டங்களும் நடைபெற்றன. இந்நிகழ்ச்சியில் தமிழக ஆளநர் ஆர்.என்.ரவி சிறப்பு விருந்தினராக கலந்து கொண்டார்.
மக்களுக்கு ஹேப்பி நியூஸ்..தீபாவளி பரிசாக இலவச சிலிண்டர்..!! ” அரசின் அதிரடி அறிவிப்பு”..!!
அந்த விழாவில் தமிழ் தாய் வாழ்த்து பாடிய போது ‘ தெக்கணமும் அதிற்சிறந்த திராவிடநல் திருநாடும்’ என்ற வரி பாடப்படாததால் பெரும் சர்ச்சை உண்டாகியுள்ளது. மேலும் தமிழ்த்தாய் வாழ்த்து பாடும் போது “திராவிடநல் திருநாடும்” என்ற வரியை ஆளுநர் தவிர்த்து உள்ளதாக கூறப்படுகிறது. முன்னதாக தமிழக அமைச்சரவையில் ‘திராவிட’ என்ற வார்த்தையை ஆளுநர் ரவி தவிர்த்து இருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.


























