தமிழக பள்ளி & கல்லூரிகளுக்கு நாளையும் விடுமுறை – அரசு அறிவிப்பு!
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் ஏற்பட்ட சேதம் காரணமாக சென்னையில் நாளையும் பள்ளிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.
விடுமுறை:
வங்கக்கடலில் உருவான மிக்ஜாம் புயலால் சென்னையில் தீவிர கனமழை பெய்தது. இடைவிடாத தொடர்ந்து பெய்த மழையால் சென்னை நகரம் நீரில் மூழ்கியுள்ளது. தற்போது குடியிருப்பு பகுதிகளில் முழங்கால் அளவு தண்ணீர் நிரம்பியுள்ளதால் பொதுமக்கள் வெளியே வர முடியாத சூழலுக்கு ஆளாகியுள்ளனர். பல பகுதிகளில் வெள்ள நீர் வீட்டுக்குள் புகுந்து பெரும் பாதிப்பை ஏற்படுத்தியுள்ளது. இந்த நிலையில் தேசிய பேரிடர் மீட்பு குழுவினர் இரவு பகலாக மீட்பு பணியில் ஈடுபட்டுள்ளனர்.
1-9 ஆம் வகுப்பு தேர்வெழுதும் மாணவர்களுக்கு சூப்பர் சலுகை – பள்ளிக்கல்வித்துறை முடிவு!!
இந்த கனமழை மற்றும் புயல் காரணமாக சென்னையில் கடந்த இரண்டு நாட்களாக பள்ளிகள் மற்றும் கல்லூரிகள், வணிக நிறுவனங்களுக்கு தமிழக அரசு விடுமுறை அறிவித்தது. தற்போது வரை சென்னையில் நிலைமை சீராகாத காரணத்தினால் நாளையும் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.