விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை வேலைவாய்ப்பு 2023 – சம்பளம்: ரூ.62000/-
விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி அலகில், அருப்புக்கோட்டை ஊராட்சி ஒன்றியத்தில் காலியாக உள்ள இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் பணியிடங்களை நிரப்புவதற்கான அறிவிப்பு தற்போது வெளியாகி உள்ளது. இங்கு மொத்தம் 2 பணியிடங்கள் காலியாக உள்ளன. எனவே ஆர்வமுள்ளவர்கள் அனைத்து தகுதி விவரங்களையும் அறிந்து 29.11.2023 முதல் 19.12.2023 வரை விண்ணப்பிக்கலாம்.
வேலைவாய்ப்பு செய்திகள் 2023
நிறுவனம் | விருதுநகர் மாவட்ட ஊரக வளர்ச்சி துறை |
பணியின் பெயர் | இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுநர் |
பணியிடங்கள் | 2 |
விண்ணப்பிக்க கடைசி தேதி | 19.12.2023 |
விண்ணப்பிக்கும் முறை | Offline |
ஊரக வளர்ச்சி துறை காலிப்பணியிடங்கள்:
இரவு காவலர் மற்றும் ஈப்பு ஓட்டுனர் பதவிக்கு தலா ஒரு பணியிடம் என 2 பணியிடங்கள் காலியாக உள்ளது.
வயது வரம்பு:
01.07.2023 தேதியின் படி, விண்ணப்பிக்க விரும்பும் ஆர்வமுள்ளவர்கள் வயதானது குறைந்தபட்சம் 18 முதல் அதிகபட்சம் 53 க்குள் இருக்க வேண்டும். மேலும் வயது தளர்வு பற்றிய விவரங்களுக்கு அதிகாரப்பூர்வ அறிவிப்பை அணுகவும்.
கல்வி தகுதி:
- இரவு காவலர் – எழுதவும், படிக்கவும் தெரிந்திருக்க வேண்டும்.
- ஈப்பு ஓட்டுநர் – எட்டாம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருக்க வேண்டும்.
தேர்வு செயல் முறை:
மேற்கண்ட பணிக்கு ஆர்வமுள்ளவர்கள் நேர்காணல் மூலம் தேர்வு செய்யப்பட உள்ளனர்.
சம்பள விவரம்:
- இரவு காவலர் – ரூ.15700 – 50000/-
- ஈப்பு ஓட்டுநர் – ரூ.19500 – 62000/-
விண்ணப்பிக்கும் முறை:
https://virudhunagar.nic.in/notice_category/recruitment/ என்ற இணைய முகவரியில் உள்ள விண்ணப்ப படிவத்தை பூர்த்தி செய்து 19.12.2023க்குள் விண்ணப்பிக்குமாறு கேட்டுக்கொள்ளப்படுகிறது.