திருநங்கைகளுக்கு மாதம் ரூ.1000 உதவித்தொகை – ஜார்கண்ட் அரசு அறிவிப்பு!
ஜார்கண்ட் மாநிலத்தில் உள்ள திருநங்கைகளுக்கு மாதம் ரூ. 1000 உதவித்தொகை வழங்கப்படும் என முதல்வர் அறிவிப்பு வெளியிட்டுள்ளார்.
முதல்வர் அறிவிப்பு:
இந்தியாவில் பல மாநில அரசுகள் திருநங்கைகளை மூன்றாம் பாலினமாக அறிவித்து அவர்களுக்கான சலுகைகளை வழங்க தொடங்கி இருக்கின்றன. ஆனால் பல மாநிலங்களில் அரசு வேலைகளில் திருநங்கைகளுக்கு சரியான அங்கீகாரம் கொடுப்பதில்லை. வேலை இல்லாத காரணத்தால் அவர்களின் வாழ்வாதாரத்திற்கு பிச்சை எடுக்கவும், பாலியல் தொழில் செய்யவும் தொடங்கி இருக்கின்றனர். பலர் தற்கொலை செய்து கொள்ளும் செய்தியும் வெளியாகிய வண்ணம் இருக்கிறது.
தமிழக சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு முக்கிய அறிவிப்பு!
அந்த வகையில் ஜார்கண்ட் அரசு திருநங்கைகளின் வாழ்வாதாரத்திற்கு புதிய முயற்சி ஒன்றை செய்ய இருக்கிறது. அதாவது திருநங்கைகளுக்கு மாதந்தோறும் ரூ.1000 உதவித்தொகை வழங்க இருப்பதாக தற்போது அறிவிப்பு வெளியிட்டு இருக்கிறது. இது குறித்து ஜார்க்கண்ட் முக்தி மோர்ச்சா கட்சி முதல்வரான ஹே மந்த் சோரன் தலைமையில் அமைச்சரவை கூட்டத்தில் அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.