தமிழக சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை – அரசு முக்கிய அறிவிப்பு!
தமிழகத்தில் செயல்பட்டு வரும் அரசு காப்பீடு திட்ட களப்பணிகளில் ஈடுபடுத்தப்படும் சுகாதார பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் அவர்கள் அறிவித்துள்ளார்.
ஊக்கத்தொகை:
தமிழகத்தில் முதல்வரின் விரிவான காப்பீடு திட்டம் மற்றும் மத்திய அரசின் பி எம் ஜன் ஆரோக்கிய யோஜனா காப்பீடு திட்டம் போன்றவை ஒருங்கிணைக்கப்பட்டு தமிழக அரசின் காப்பீடு திட்டமாக செயல்படுத்தப்பட்டு வருகிறது. இதன் மூலமாக ஆண்டுக்கு ரூபாய் 5 லட்சம் வரை பயனாளர்கள் தங்கள் குடும்பத்தின் நபர்களுக்கு மருத்துவ சிகிச்சைகளை பெற்றுக் கொள்ள முடியும். காப்பீடு திட்ட பயனாளிகளின் விவரங்கள் அனைத்தும் தனியார் தொழில்நுட்ப அமைப்புகளின் மூலமாக இணைய பதிவேற்றம் மற்றும் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிகள் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இந்நிலையில் தமிழக பொது சுகாதாரத்துறை இயக்குனர் செல்வவிநாயகம் அவர்கள் இது தொடர்பாக அனைத்து சுகாதார துணை இயக்குனர்களுக்கும் கடிதம் அனுப்பியுள்ளார்.
வங்கிகளில் பணம் எடுக்க தடை.. அதிர்ச்சியில் வாடிக்கையாளர்கள் – ரிசர்வ் வங்கி அதிரடி நடவடிக்கை!
அதில் தனியார் நிறுவனங்களை தவிர்த்து கிராம சுகாதார செவிலியர்கள், ஆஷா பணியாளர்கள் போன்ற தமிழக சுகாதார களப்பணியாளர்கள் காப்பீடு திட்ட பணிகளில் ஈடுபடுவதற்கு அதிகாரிகள் அறிவுறுத்த வேண்டும். மேலும் இத்திட்டத்தில் தங்களை தன்னார்வலராக இணைத்துக் கொள்ளும் சுகாதாரப் பணியாளர்களுக்கு ஊக்கத்தொகை வழங்கப்படும் என்று தெரிவித்துள்ளார். இதற்காக விருப்பமுள்ள களப்பணியாளர்கள் தங்கள் மேலதிகாரிகளிடம் இதற்கான ஒப்புதலை தெரிவிக்க வேண்டும். இணைய பதிவு ஒன்றுக்கு தலா ₹5 வீதம் மற்றும் அடையாள அட்டை விநியோகிக்கும் பணிக்கு தலா ரூபாய் 3 வீதம் ஊக்க தொகையாக வழங்கப்படும் என்றும் அக்கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளது.