தற்கொலை செய்து கொள்வதாக மிரட்டும் ராதிகா.. சிக்கலில் மாட்டிக் கொண்ட கோபி – “பாக்கியலட்சுமி” சீரியல் அப்டேட்!
விஜய் டிவி “பாக்கியலட்சுமி” சீரியலில், ராதிகா கோபி வீட்டில் பயங்கர சண்டை நடக்க நான் இங்கே தான் இருப்பேன் என பிடிவாதமாக இருக்கிறார். மறுபக்கம் கோபி அவரை சமாதானம் செய்ய, ஆனால் ராதிகா நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்டுகிறார்.
பாக்கியலட்சுமி சீரியல்
பாக்கியலட்சுமி சீரியலில் தற்போது கதை சூடுபிடித்துள்ள நிலையில், ராதிகா இனிமேல் நான் இங்கே தான் இருப்பேன் என சொல்லி, பாக்கியா வீட்டிற்குள் வருகிறார். ஈஸ்வரி அவரை வெளியே போக சொல்ல, ராதிகா முடியாது என பிடிவாதமாக சொல்கிறார். இந்நிலையில் பாக்கியாவை ராதிகா வெளியே போக சொல்ல, ஈஸ்வரி தனக்கு மகனும் முக்கியம் மருமகளும் முக்கியம் என பிடிவாதமாக இருக்கிறார். ராதிகா நான் போகாமல் இருந்தால் என்ன செய்வீங்க என கேட்க, கொன்றுவேன் என ஈஸ்வரி சொல்கிறார்.
அப்போது என்ட்ரி கொடுத்த ராதிகாவின் அம்மா, என் மகளை வைத்து வாழாமல் இருந்தால் போலீசில் புகார் கொடுப்பேன் என சொல்கிறார். ராதிகா வேகமாக உள்ளே செல்ல, கோபி அவரை சமாதானம் செய்ய செல்கிறார். உடனே ராதிகா என்னை கொடுமைப்படுத்தினால் நான் தற்கொலை செய்து கொள்வேன் என மிரட்ட கோபியால் என்ன முடிவெடுப்பது என தெரியாமல் முழிக்கிறார். இனி வரும் எபிசோடுகளில் ராதிகாவும் பாக்கியாவும் ஒரே வீட்டில் இருப்பார்களா இல்லை, பாக்கியா வெளியே போவாரா என்பது எல்லாம் வர இருக்கிறது.