ஒற்றை பெற்றோர் வேலைக்கு சென்றாலும் குழந்தைகளை தத்தெடுக்கலாம் – ஐகோர்ட் அதிரடி உத்தரவு!
மகாராஷ்டிராவில் கீழ்கோர்ட் நீதிமன்றம் வேலைக்கு செல்லும் ஒற்றை பெற்றோர் குழந்தைகளை தத்தெடுக்க மறுப்பு தெரிவித்த நிலையில், தற்போது மும்பை ஐகோர்ட் இதற்கு அனுமதி அளித்து அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளது.
ஒற்றை பெற்றோர்:
மகாராஷ்டிராவில் ஜல்கான் மாவட்டத்தில் 47 வயது பெண் ஒருவர் தன் தங்கையின் 4 வயது மகளை தத்தெடுக்க வேண்டும் என்று உரிமை கோரி கீழ் கோர்ட்டில் மனு ஒன்று தாக்கல் செய்திருந்தார். இந்த வழக்கு விசாரணையின் போது மனுதாரர் விவாகரத்து பெற்றவர் என்றும், மேலும் அவர் வேலைக்கு சென்று கொண்டிருப்பதால் குழந்தையை பார்த்துக் கொள்ள முடியாது என்றும் நீதிபதிகள் தெரிவித்தனர். அதனால் குழந்தையை அவர் தத்தெடுக்க கூடாது என்றும் குழந்தை பெற்றோர் வளர்ப்பில் வளர வேண்டும் என்றும் உத்தரவு பிறப்பித்தனர்.
நகைப்பிரியர்களுக்கு சர்பிரைஸ் – திடீரென குறைந்த ஆபரணத்தங்கத்தின் விலை!
இந்த நிலையில், கீழ் கோர்ட்டின் தீர்ப்பை எதிர்த்து மும்பை ஐகோர்ட்டில் மனுதாரர் மேல்முறையீடு செய்தார். இந்த வழக்கு விசாரணையின் போது நீதிபதிகள் தெரிவித்துள்ளதாவது, தத்தெடுக்கும் நபர் ஒற்றை பெற்றவராக இருப்பின் அவர் கட்டாயமாக வேலைக்கு செல்ல வேண்டியது அவசியமாகும். இந்த காரணத்தை கூறி இவர் தத்தெடுக்க தகுதியற்றவர் என கூற முடியாது என தெரிவித்துள்ளனர்.
Follow our Instagram for more Latest Updates
மேலும் ஒற்றை பெற்றோர் குழந்தையை தத்தெடுத்து வளர்க்கலாம் என்று சட்டத்தில் உரிமை உள்ள நிலையில் இவ்வாறு தத்தெடுக்க தகுதியற்றவர் என கூறுவது சட்டத்திற்கு விரோதமானது என்றும் கருத்து தெரிவித்தனர். அதனால் கீழ் கோர்ட்டின் உத்தரவை ரத்து செய்து அந்த பெண் தன் தங்கையின் குழந்தையை தத்தெடுக்க அனுமதி அளித்து மும்பை ஐகோர்ட் உத்தரவு பிறப்பித்தது.
Exams Daily Mobile App Download