இரக்கம் காட்டாத தங்கத்தின் விலை.. இன்றைய நிலவரத்தால் நகைப்பிரியர்கள் அதிர்ச்சி.. எவ்வளவுன்னு பாருங்க!
தமிழகத்தில் ஆபரணத்தங்கத்தின் விலை கடந்த ஒரு வாரமாக தொடர்ந்து அதிகரித்து வருகிறது. அந்த வகையில் இன்றைய காலை நேர நிலவரப்படி ஒரு சவரன் ரூ. 680 உயர்ந்துள்ளது. இதனால் நகைப்பிரியர்கள் கவலையடைந்துள்ளனர்.
தங்கம் விலை:
இந்தியாவில் தற்போது பொருளாதார சரிவு மற்றும் பணவீக்கம் அத்துடன் அமெரிக்க டாலருக்கு நிகரான இந்திய ரூபாயின் மதிப்பும் வீழ்ச்சி அடைந்துள்ளது. இதன் எதிரொலியாக தற்போது ஆபரணத் தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருகிறது. இந்தியாவை பொறுத்தவரை மக்கள் அதிக அளவு தங்கத்தால் ஆன அணிகலண்களை அணிகின்றனர்.
Follow our Instagram for more Latest Updates
அதனால் தங்கத்தின் தேவையும், பயன்பாடும் அதிகரித்து காணப்படுகிறது. இந்த நிலையில் ஆபரணத்தங்கத்தின் விலை தொடர்ந்து உயர்ந்து வருவது சாமானியர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்துகிறது. கடந்த ஒரு வாரமாகவே தங்கம் விலை சவரனுக்கு 1000க்கு மேல் உயர்ந்துள்ளது. அதனை தொடர்ந்து இன்று ஆபரணத்தங்கத்தின் விலை சவரனுக்கு ரூ.680 அதிகரித்துள்ளது.
Exams Daily Mobile App Download
இதனையடுத்து ஒரு சவரன் ரூ.39.240 க்கு விற்பனை செய்யப்பட்டு வருகிறது. மேலும் ஒரு கிராம் தங்கம் விலை ரூ.55 உயர்ந்து ரூ. 4,905க்கு விற்பனையாகி வருகிறது. தங்கத்தை தொடர்ந்து வெள்ளி ஒரு கிராமுக்கு 80 காசுகள் உயர்ந்து ரூ.67.80க்கு விற்பனையாகி வருகிறது. மேலும் ஒரு கிலோ வெள்ளி ரூ.800 உயர்ந்து, ரூ.67,800க்கு விற்பனையாகி வருகிறது.
Telegram Updates for Latest Jobs & News – Join Now