தமிழக ரேஷன் கடைகளில் இனி புதிய முறையில் பொருள்கள் பெறும் வசதி – அமைச்சர் விளக்கம்!
தமிழகத்தில் தற்போது ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் அமலில் இருக்கும் நிலையில் கை ரேகை மூலமாக ரேஷன் கடைகளில் பொருள்கள் வழங்கப்பட்டு வருகிறது. இந்நிலையில் ரேஷன் கடைகளில் கருவிழி மூலம் பொருட்கள் பெறும் வசதி வரும் அக்டோபர் 15-ம் தேதிக்குள் தொடங்க இருப்பதாக அமைச்சர் சக்கரபாணி தெரிவித்துள்ளார்.
ரேஷன் கடைகள்
தமிழக அரசின் கூட்டுறவு துறையின் கீழ் பல ரேஷன் கடைகள் செயல்பட்டு வருகின்றன. இந்நிலையில் மத்திய அரசின் ஒரே நாடு ஒரே ரேஷன் திட்டம் தமிழகத்திலும் அமல்படுத்தப்பட்டு உள்ளது. இந்த திட்டம் மூலமாக ரேஷன் அட்டையில் பெயர் இருக்கும் குடும்ப உறுப்பினர்கள் தங்களது கை ரேகையை வைத்து பொருள்கள் வாங்கி செல்கின்றனர். இந்நிலையில் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் அவ்வப்போது கோளாறு ஏற்படுவதாக புகார் வந்த வண்ணம் இருக்கிறது.
இது குறித்து சென்னை தலைமைச் செயலகத்தில் செய்தியாளர்களை சந்தித்த அமைச்சர் சக்கரபாணி கூறுகையில், தமிழகத்தில் ரேஷன் கடைகள் மூலமாக குறைந்த விலையிலும், இலவசமாகவும் அரிசி, பருப்பு உள்ளிட்ட உணவு பொருள்கள் வழங்கப்பட்டு வருவதாக தெரிவித்தார். மேலும் ரேஷன் பொருட்கள் வாங்குவதற்கான மின்னணு பதிவேட்டில் கோளாறு ஏற்படுவதாக அடிக்கடி புகார் வருகிறது. அதனால் அனைத்து ரேஷன் கடைகளிலும் கருவிழி பதிவு செய்ய நடவடிக்கை எடுக்கப்படும் என அவர் தெரிவித்தார்.
தமிழகத்தில் கேள்விக்குறியாகும் மாணவர்களின் எதிர்காலம் – அதிர்ந்து போன பள்ளிக் கல்வித்துறை!
Exams Daily Mobile App Download
நாடு முழுவதும் பல மாநிலங்களில் 100 சதவீதம் கண் கருவிழி பதிவு மூலமாக ரேசன் கடைகளில் பொருட்கள் வாங்கும் வசதி இருக்கிறது. தமிழகத்திலும் கருவிழி மூலமாக ரேஷன் பொருள்கள் வழங்க அக். 15 முதல் முதற்கட்ட சோதனை நடைபெற இருக்கிறது என அவர் தெரிவித்தார். மின்னணு பதிவேட்டுக்கு பதிலாக குடும்ப அட்டைதாரர்களின் கருவிழி மூலம் பதிவு செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதாகவும் அது நல்ல முறையில் பலன் கொடுத்தால் உடனே அமல்படுத்தப்படும் என அவர் தெரிவித்தார்.
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்