தமிழகத்தில் 13,000 பள்ளிகளில் உள்ள மாணவர்களுக்கான அறிவிப்பு – அமைச்சர் உறுதி!
தமிழகத்தில் சிறார் திரைப்படங்களை திரையிட 13 ஆயிரம் பள்ளிகள் தேர்வு செய்யப்பட்டுள்ளதாக பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் தெரிவித்துள்ளார். இதன் தொடக்கமாக பட்டீஸ்வரம் அரசு மாதிரி மேல்நிலைப்பள்ளியில் சிறார் திரைப்படத் திருவிழாவை பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தொடங்கி வைத்தார்.
சிறார் படங்கள்:
தமிழகத்தில் கடந்த 2 வருடங்களாக பள்ளிகள் சரியாக திறக்கப்படவில்லை. இருப்பினும் நடப்புக் கல்வியாண்டில் பள்ளிகள் கடந்த ஜூன் 13 முதல் தொடங்கி மாணவர்கள் பள்ளிகளுக்கு சென்று வருகின்றனர். இந்நிலையில், மாணவர்களின் வாழ்வியல் நற்பண்புகளை மேற்படுத்தும் வகையில் சிறார் திரைப்பட விழா நடத்தப்படும் என தமிழக அரசு அண்மையில் அறிவித்தது. இதன் அடிப்படையில் கும்பகோணம் அருகே பட்டீஸ்வரத்தில் உள்ள அண்ணா அரசு மாதிரி பள்ளியில் நேற்று சிறார் திரைப்படத் திருவிழாவின் தொடக்க விழா நடைபெற்றது.
Exams Daily Mobile App Download
அப்போது பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி சிறார் திரைப்பட திருவிழாவை தொடங்கி வைத்தார்.அப்போது பேசிய பள்ளி கல்வித்துறை அமைச்சர், இந்த திரைப்பட விழாவின் சிறார் திரைப்பட விழா என்பது மாதம் ஒருமுறை ஒரு திரைப்படத்தை பள்ளியில் ஒளிபரப்பி குழந்தைகளை பார்க்க வைப்பது மட்டுமல்ல. திரைப்படத்தின் மூலம் குழந்தைகளின் எண்ண ஓட்டங்களை ஓர் மதிப்பீடு செய்து அவர்களை மேன்மைப்படுத்தும் நோக்கம் தான்.
தமிழகத்தில் ஜூலை 8ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
மேலும் கல்வி என்பது வெறுமனே ஏட்டுக்கல்வி மட்டுமல்ல. பாடப் புத்தகங்களை படிப்பதோடு சேர்த்து வெவ்வேறு விஷயங்களைக் கற்றுக் கொள்வது தான் என்பதை புரிந்து சிறார் திரைப்படங்கள் திரையிட முடிவு செய்யப்பட்டுள்ளது.அனைத்து அரசு நடுநிலை, உயர்நிலை மற்றும் மேல்நிலைப் பள்ளிகளில் மாதத்தின் 2வது வாரத்தில் சிறார் திரைப்படங்கள் திரையிடப்படும். இத்திரையிடலுக்கென தனியே பாடவேளைகள் ஒதுக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு பள்ளியிலும் இதற்கென ஓர் ஆசிரியர் பொறுப்பாளராக நியமிக்கப்பட்டு அவருக்கு சிறப்புப் பயிற்சி அளிக்கப்படும். இவையெல்லாம் குழந்தைகளை மேம்படுத்துவதற்காக ஒரு கூடுதல் உற்சாகம்தான். எனவே இந்தத் திரைப்பட விழாக்கள் குழந்தைகள் தங்களை மேம்படுத்த பெரிதும் உதவும் என நம்புகிறோம். தமிழகம் முழுவதும் 13 ஆயிரம் பள்ளிகளில் இந்த விழாக்கள் நடக்க உள்ளது என்றார்.