தமிழகத்தில் ஜூலை 8ம் தேதி மின்தடை ஏற்படவுள்ள பகுதிகள் – மின்வாரியம் அறிவிப்பு!
ராமநாதபுரம் மாவட்டத்தில் உள்ள துணை மின் நிலையத்தில் நாளை மாதாந்திர மின் பராமரிப்பு பணிகள் நடைபெற உள்ளது. இதனால் குறிப்பிட்ட பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது.
மின்தடை:
இன்றைய கால கட்டத்தில் மின்சாரம் இல்லாமல் எவ்வித வேலைகளையும் செய்ய முடியாது என்ற நிலை வந்து விட்டது. முன்பெல்லாம் கிராமப் பகுதிகளில் மின் வசதி குறைவாக இருக்கும் தற்போது அனைவரும் மின் இணைப்பு பெற்றுள்ளனர். அதனை தொடர்ந்து வளர்ந்து வரும் தொழில் நுட்பத்திற்கு மின்தேவை அதிகமாக உள்ளது. இத்தகைய அத்தியாவசிய தேவைகளில் ஒன்றான மின்சாரத்தை மக்களுக்கு தடையில்லாமல் வழங்க வேண்டியது அவசியம். அதனால் அனைத்து மாவட்டங்களிலும் மாதந்தோறும் தவறாது மின் பராமரிப்பு பணிகள் நடைபெற்று வருகிறது.
Exams Daily Mobile App Download
இந்த பராமரிப்பு பணிகளின் போது கம்பங்களை மாற்றுதல் வயர்களை சரி செய்தல், பழுதடைந்த மின் கம்பிகளை மாற்றுதல், மின் இணைப்புகளை சரி செய்தல் போன்ற பணிகள் மேற்கொள்ளப்படுகிறது. மேலும் இப்பணிகளின் போது மின் ஊழியர்கள் மற்றும் பயனர்களின் பாதுகாப்பிற்காக மின்தடை செய்யப்பட்டு வருகிறது. மேலும் இந்த மின் விநியோக தடை குறித்து அந்தந்த பகுதி செயற்பொறியாளர்கள் மக்களுக்கு முன்னறிவிப்பு செய்கின்றனர். இதனை மின் பயனர்கள் செய்தித்தாள், சமூக வலைத்தளங்கள் மூலம் அறிந்து அதற்கேற்றவாறு தங்களது பணிகளை செய்து முடித்து விடுகின்றனர்.
தமிழகத்தில் நாளை வேலைவாய்ப்பு முகாம் – 8 ஆம் வகுப்பு தேர்ச்சி பெற்றிருந்தாலே போதும்!
v
மற்ற மாவட்டங்களை தொடர்ந்து நாளை (ஜூலை 8) ராமநாதபுரம் மாவட்டத்தில் சக்கரக்கோட்டை, ராமநாதபுரம் நகா் சின்னக்கடை வீதி, புலிக்காரத் தெரு, பழைய மற்றும் புதிய பேருந்து நிலையம் ஆகிய பகுதிகளில் மின்தடை செய்யப்படும் என்று மின்வாரியம் தெரிவித்துள்ளது. அதனை தொடர்ந்து கேணிக்கரை மற்றும் தாயுமானவ சுவாமிகள் தெரு, தங்கப்பா நகர், வண்டிக்கார தெரு, அண்ணா நகர் ஆகிய பகுதிகளில் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 2 மணி வரை மின் விநியோகம் தடை செய்யப்படும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.