நாளை வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை – வானிலை ஆய்வு மையம் அறிக்கை!
மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர் கனமழையின் காரணமாக நாளை வரை ஆரஞ்சு அலர்ட் எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது. மேலும், மழையின் காரணமாக ஏற்படும் உயிர்சேதத்தையும் தடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.
கனமழை:
இந்தியாவில் தமிழகம், கேரளா, மகாராஷ்டிரா உள்ளிட்ட மாநிலங்களில் அதிக அளவில் மழை பெய்து வருகிறது. அதாவது, காற்றின் வேக திசை மாறுபாட்டின் காரணமாக அதி வேகமான காற்றுடன் இடி மின்னலுடன் கூடிய மழை பெய்து வருகிறது. மேலும், அசாம் மாநிலத்தில் கனமழையின் காரணமாக வெள்ளபெருக்கும், நிலச்சரிவும் ஏற்பட்டு வருகிறது. இதனால் அந்த மாநிலம் முழுக்கவே அனைத்து போக்குவரத்து சேவைகளும் நிறுத்தி வைக்கப்பட்டுள்ளது.
Exams Daily Mobile App Download
தமிழகத்தை பொறுத்த வரைக்கும் ஓரிரு இடங்களில் அதி கனமழையும், மேலும் சில இடங்களில் மிதமான மழைப்பொழிவும் இருந்து வருகிறது. மேலும், இன்று தமிழகத்தின் 5 மாவட்டங்களில் அதி கனமழைக்கும் வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. அதிலும் குறிப்பாக நீலகிரி, திண்டுக்கல், தேனி முதலிய மாவட்டங்களில் அதி கனமழை பெய்து வருவதால் இயல்பு வாழ்க்கை பாதிப்படைந்துள்ளது. மகாராஷ்டிரா மாநிலத்தில் அதிக அளவில் மழைப்பொழிவு ஏற்பட்டு வருவதால் சாலைகள் முழுக்க வெள்ளக்காடாய் காட்சியளிக்கிறது.
தமிழகத்தில் நாளை (ஜூலை 8) தனியார்துறை வேலைவாய்ப்பு முகாம் – மாவட்ட நிர்வாகம் அறிவிப்பு!
இந்நிலையில், மகாராஷ்டிரா மாநிலத்தில் தொடர்ந்து கனமழை பெய்து வரும் நிலையில் நாளை வரைக்கும் ஆரஞ்சு அலர்ட் கொடுக்கப்பட்டுள்ளது. மேலும், தொடர் மழையின் காரணமாக அந்தேரி போன்ற பகுதிகளில் அதிக அளவில் தண்ணீர் தேங்கியுள்ளது. இதனால் பொதுமக்களை பாதுகாப்புடன் இருக்கும்படி அதிகாரிகள் எச்சரித்துள்ளனர். மேலும், சாலைகளில் அதிகளவில் தண்ணீர் தேங்கியுள்ளதால் அந்த நீரை அகற்றுவதற்கான வேலையில் ஊழியர்கள் ஈடுபட்டுள்ளனர். இதனையடுத்து, மழைக்காலங்களில் ஏற்படும் உயிர் சேதத்தை தடுக்க நடவடிக்கை எடுப்பதாக முதல்வர் அறிவித்துள்ளார்.