தமிழகத்தில் பள்ளிகளுக்கு ஒரு வாரத்திற்கு விடுமுறை – அதிரடி அறிவிப்பு!
தமிழகத்தில் கொரோனா பரவல் குறைந்ததை தொடர்ந்து பிப்ரவரி முதல் அனைத்து பள்ளிகளும் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்பட்டுக் கொண்டிருக்கிறது. இதனை தொடர்ந்து தற்போது தனியார் பள்ளிகளில் மாணவர்கள் 75 சதவீத கட்டணம் மட்டுமே செலுத்தினால் போதும் என்று அரசு அறிவித்துள்ளது. அதனால் இதற்கு எதிராக தனியார் பள்ளி சங்கங்கள் போராட்டம் நடத்த உள்ளதாக அறிவிப்பை வெளியிட்டுள்ளது.
பள்ளி விடுமுறை
இந்தியா முழுவதும் கொரோனா பெருந்தொற்று பரவலை கட்டுப்படுத்த பள்ளி மற்றும் கல்லூரிகளுக்கு விடுமுறை அளிக்கப்பட்டது. அதனால் மாணவர்களுக்கு வீட்டில் இருந்தபடியே ஆன்லைன் முறையில் வகுப்புகள் நடைபெற்றது. தற்போது கொரோனா பரவல் கட்டுக்குள் வரவழைக்கப்பட்டுள்ளது. அதன்படி இப்போது அனைத்து மாநிலங்களிலும் பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டு வழக்கம் போல செயல்படத் தொடங்கியுள்ளது. இதே போல் தமிழகத்திலும் கொரோனா பரவல் காரணமாக கடந்த பிப்ரவரி 1ம் தேதி முதல் அனைத்து பள்ளி மற்றும் கல்லூரிகள் திறக்கப்பட்டுள்ளன.
TNPSC வெளியிட்ட முக்கிய அறிவிப்பு 2022 – 7ம் வகுப்பு முடித்தவர்கள் கவனத்திற்கு!
கடந்த ஆண்டு கொரோனா காரணமாக பொதுத்தேர்வு ரத்து செய்யப்பட்டது. இந்த ஆண்டு கொரோனா பரவல் குறைந்துள்ளதால் தற்போது 10 முதல் 12ம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வுக்கான முன்னேற்பாடுகள் தீவிரமாக நடைபெற்றுக் கொண்டிருக்கிறது. இதையடுத்து 2022-23 கல்வி ஆண்டுக்கான மாணவர் சேர்க்கைகள் தொடங்கியுள்ளது. கொரோனா கால கட்டத்தில் ஆன்லைன் மூலமாக தனியார் பள்ளிகள் மாணவர்களுக்கு வகுப்புகளை நடத்தி வந்தனர். அதனால் மாணவர்கள் 75% கட்டணத்தை மட்டுமே செலுத்தினால் போதும் என்று அரசு அறிவித்தது. இந்த ஆண்டு நேரடி வகுப்புகள் தொடங்கியுள்ளதால் தனியார் பள்ளிகளில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுகிறது.
இது தொடர்பாக பல்வேறு தரப்பினர் புகார் அளித்ததன் காரணமாக தமிழகத்தில் அதிக கட்டணத்தை வசூலிக்கும் தனியார் பள்ளிகள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அரசு எச்சரித்தது. இந்த அறிவிப்பால் தனியார் பள்ளிகள் மிகவும் வேதனை அடைந்துள்ளனர். மேலும் தங்களால் குறைவான கட்டணத்தை பயன்படுத்தி பள்ளி நிர்வாகத்தை நடத்த முடியாது என்றும் வருத்தம் தெரிவிக்கின்றனர். அதனால் தற்போது தனியார் பள்ளி சங்கங்கள் ஜூன் மாதத்தில் ஒரு வாரம் பள்ளிகளை மூடி போராட்டம் நடத்த உள்ளதாக அறிவித்துள்ளது. இதில் பிரைமரி, மெட்ரிகுலேஷன், சிபிஎஸ்இ பள்ளிகள் உள்ளிட்டவைகளும் கலந்து கொள்ளும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.