கண்ணம்மாவை வீட்டிற்கு வர வழைக்கும் பாரதி, பதட்டத்தில் குடும்பத்தினர் – இன்றைய “பாரதி கண்ணம்மா” எபிசோட்!!
விஜய் டிவி “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியின் அம்மா கண்ணம்மா தான் என்று தெரிந்துக் கொள்ள பாரதி லட்சுமியை தனது வீட்டிற்கு கொண்டுவருகிறார். கண்ணம்மா ஆட்டோவில் வந்துக் கொண்டிருக்க, வீட்டில் இருப்பவர்கள் எவ்வளவோ சொல்லி சமாளிக்கின்றனர். ஆனால் பாரதி பிடிவாதமாக இருக்கிறார்.
பாரதி கண்ணம்மா:
இன்று “பாரதி கண்ணம்மா” சீரியலில், லட்சுமியை எதற்கு இங்கே கூட்டிக் கொண்டு வந்த என்று சௌந்தர்யா கேட்கிறார். லட்சுமியின் அம்மாவை நான் பார்க்க வேண்டும் என பாரதி சொன்னதை கேட்டு குடும்பத்தினர் அதிர்ச்சி அடைகின்றனர். சௌந்தர்யா யாரோ குழந்தையை எதற்கு நம்ம வீட்டில் வைத்திருக்க வேண்டும் என சௌந்தர்யா சமாளிக்க பாரதி பிடிவாதமாக இருக்கிறார்.
கண்ணம்மா ஆட்டோவில் வந்துக் கொண்டிருக்க, அகிலை கொண்டு போய் விட சொல்லி வேணு சொல்கிறார். ஆனால் பாரதி லட்சுமி அம்மா அப்பா வரும் வரை அவள் இங்கையே இருக்கட்டும் என்று உண்மை தெரிந்தும் தெரியாதது போல இருக்கிறார். கண்ணம்மா எதோ தப்பு நடந்திருப்பதை உணர்ந்து, பாரதிக்கு உண்மை தெரிந்திருக்கும் என்ற பயத்தில் வருகிறார்.
இத்தனை நாள் எது தெரியக் கூடாது என்று நினைத்தோமோ அது தற்போது நடந்துவிட்டது என்று கண்ணம்மா பயப்படுகிறார். பாரதி இதனை நாள் குடும்பத்தில் உள்ளவர்கள் சொன்ன பொய்யை நினைத்து பாரதி கோபப்படுகிறார். பின்னர் அஞ்சலி அம்மா அப்பா என்ன தான் உங்களது குடும்பத்தில் நடக்கிறது என்று கேட்க, லட்சுமி கண்ணம்மாவின் மகள் தான் என்று உண்மையை சொல்கிறார்.
ஆகஸ்ட் 23 ஆம் தேதி 9 முதல் 12 வரையுள்ள வகுப்புகளுக்கு பள்ளிகள் திறப்பு – மாநில அரசு அறிவிப்பு!
பின்னர் சௌந்தர்யாவும், வேணுவும் பாரதிக்கு உண்மை தெரிந்ததால் தான் அவன் இப்படி நடந்து கொள்கிறான். எப்படியும் கண்ணம்மாவிற்கு உண்மை தெரிந்திருக்கும் அவள் வந்துக் கொண்டிருப்பாள் என்று பேசிக் கொண்டு போன் செய்ய போனை தேடுகின்றனர். அப்போது அவள் 6 தடவை போன் செய்ததை பார்த்து அதிர்ச்சி அடைகின்றனர். இத்துடன் இன்றைய எபிசோட் முடிவடைகிறது.
“பாண்டியன் ஸ்டோர்ஸ்” சீரியல் லேட்டஸ்ட் விடீயோவை பார்க்க கிளிக் பண்ணுங்க!!