12 மாநிலங்களில் 1 லட்சம் கொரோனா நோயாளிகள் – மத்திய அரசு தகவல்!
இந்தியாவில் 12 மாநிலங்களில் 1 லட்சம் நோயாளிகள் கொரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருவதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
அதிகரிக்கும் நோயாளிகள் :
இந்தியா முழுவதும் கொரோனா இராண்டாம் அலை காட்டுத்தீ போல பரவி தொற்று பரவல் நாளுக்கு நாள் அதிகரித்து வருகிறது. உலகிலேயே கொரோனா வைரஸ் பாதிப்பில் இந்தியா முதல் இடத்தில் இருக்கிறது. தினந்தோறும் உயிரிழப்புகளும் தொடர்ந்து அதிகரித்து வருகிறது. மத்திய, மாநில அரசுகள் பல்வேறு தடுப்பு நடவடிக்கைகளை எடுத்தும் பயனளிக்கவில்லை. முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக அரசு ஊரடங்குகளை அறிவித்துள்ளது. மக்களின் நடமாட்டத்தை குறைத்து தொற்றிலிருந்து மக்களை காக்க வார இறுதி நாட்களிலும் ஊரடங்கை அமல்படுத்தியுள்ளது.
ஆனாலும் சில மாநிலங்களில் தொற்று எண்ணிக்கையானது எதிர்பாராத அளவு உயர்ந்துள்ளது. இந்தியாவில் 12 மாநிலங்களில் கொரோனா வைரஸ் தொற்றால் பாதிக்கப்பட்டு 1 லட்சம் நோயாளிகள் மருத்துவமனைகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர். மஹாராஷ்டிரா, கேரளா, தமிழ்நாடு, உத்தர பிரதேம், மேற்கு வங்காளம், ஆந்திரா, ராஜஸ்தான், பீகார் உள்ளிட்ட 12 மாநிலங்களில் தொற்று எண்ணிக்கை அதிகளவு காணப்படுகிறது.
ஜூன் 14 வரை பள்ளிகளுக்கு கோடை விடுமுறை – அறிவிப்பு வெளியீடு!!
இதனால் அம்மாநிலங்களில் 1 லட்சம் நோயாளிகள் மருத்துவமனைகளில் கொரோனா வார்டுகளில் சிகிக்சை பெற்று வருகின்றனர் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மே 1 முதல் 18 வயது முதல் 44 வயதிற்குட்பட்ட 71 இலட்சம் பேருக்கு கொரோனா தடுப்பூசி செலுத்தப்பட்டதாக மத்திய அரசு தெரிவித்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்