தமிழகத்தில் முழு ஊரடங்கு அமல் – மருத்துவர் சங்கம் கோரிக்கை!!
தமிழகத்தில் கொரோனா பரவலை தடுக்க அரசு முழு ஊரடங்கை அமல்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அரசு மருத்துவர்கள் சங்கம் கோரிக்கை வைத்துள்ளது. அதே போல கொரோனா நோயாளிகளை கவனிக்க கூடுதல் மருத்துவர்கள் மற்றும் செவிலியர்களை நியமிக்க வேண்டும் என்றும் வலியுறுத்தப்பட்டுள்ளது.
கொரோனா பாதிப்பு
தமிழகத்தில் தொடர்ந்து கொரோனா பாதிப்பு எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் இருந்து வருகின்றது. கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 21 ஆயிரத்திற்கும் அதிகமானோர் இந்த நோய் தொற்றினால் பாதிக்கப்பட்டுள்ளனர். அதே போல் 144 பேர் மரணம் அடைந்து உள்ளனர். இதனால் மாநிலத்தில் ஊரடங்கு விதிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. நாளை முதல் மேலும் புதிய விதிகள் நடைமுறைப்படுத்தப்பட உள்ளன.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் – அரசு அறிவிப்பு!!
தற்போது இது குறித்து தமிழக அரசு மருத்துவர்கள் சங்க தலைவர் செந்தில் ஒரு அறிக்கையினை தமிழக அரசிற்கு வழங்கியுள்ளார். அதில் தமிழகத்தில் கூடிய விரைவில் முழு ஊரடங்கினை அமல்படுத்த வேண்டும் என்றும் அப்போது தான் கொரோனா பரவலை தடுக்க முடியும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. தனியார் மருத்துவமனைகளில் நோயாளிகளுக்கு தேவையான ரெம்டெசிவிர் மற்றும் ஆக்சிஜன் இல்லாத காரணத்தால் நோய் தாக்கத்திற்கு எதிரான அவர்களின் பங்கு குறைந்து விட்டது.
கொரோனா நோயாளிகளை கண்காணிக்க தமிழகத்தில் கூடுதல் மருத்துவர்கள், செவிலியர்கள் வேண்டும். முழு ஊரடங்கினை அறிவித்ததும், அந்த காலத்தை ஆக்சிஜன் உற்பத்தியை பெருகிக்கொள்ளவும், ஆக்சிஜன் தேவையை பூர்த்தி செய்யவும், நோயாளிகளுக்கு அந்த ஆக்சிஜனை பகிர்ந்தளிக்கவும் பயன்படுத்தி கொள்ளலாம் என்றும் அவர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்