ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிப்பு – மாவட்ட ஆட்சியர் விளக்கம்!!
தூத்துக்குடி ஸ்டெர்லைட் ஆலையில் மருத்துவ ஆக்ஸிஜன் தயாரிக்க இன்னும் 7 நாட்கள் ஆகலாம் என்று மாவட்ட ஆட்சியர் செந்தில்ராஜ் தெரிவித்துள்ளார்.
ஆக்ஸிஜன் தயாரிப்பு:
நாடு முழுவதும் கொரோனா நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வரும் நிலையில் அவர்களுக்கான மருத்துவ ஆக்ஸிஜன் மற்றும் பல மருத்துவனைகளில் படுக்கைகளுக்கும் தட்டுப்பாடுகள் அதிகரித்து வருகிறது. கடந்த சில நாட்களில் ஆக்ஸிஜன் இல்லாமல் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருகிறது. இந்நிலையில், பல நாடுகளும் நமது நாட்டிற்கு இலவசமாக ஆக்ஸிஜனை அளிக்க முன் வந்துள்ளது குறிப்பிடத்தக்கது.
தமிழகத்தில் டாஸ்மாக் கடைகள் 4 மணிநேரம் மட்டுமே செயல்படும் – அரசு அறிவிப்பு!!
தமிழகத்தின் தூத்துக்குடி மாவட்டத்தில் உள்ள ஸ்டெர்லைட் ஆலை இயங்குவதற்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆனால் ஆக்ஸிஜன் தட்டுப்பாடு உள்ள இந்த சூழலில் ஆலையை இயங்க அனுமதித்தால் ஆக்ஸிஜன் உற்பத்தி செய்து அரசுக்கு இலவசமாக வழங்குவோம் என்று வேதாந்தா நிறுவனம் உச்ச நீதிமன்றத்தில் மனு கொடுத்தது. இதனால் தமிழகத்தில் அனைத்து கட்சியினரும் சேர்ந்து ஆலோசித்து ஆக்ஸிஜன் உற்பத்திக்காக மட்டும் நான்கு மாதங்கள் ஆலையை திறக்க முடிவு செய்யப்பட்டது.
ஆக்ஸிஜன் உற்பத்தியை கண்காணிக்க தூத்துக்குடி ஆட்சியர் தலைமையில் 7 பேர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. இக்குழுவினர் ஆலையை ஆய்வு செய்வதற்காக இன்று சென்றனர். இவர்கள் அளிக்கும் அறிக்கையின் அடிப்படையில், ஆலைக்கு மின்இணைப்பு வழங்கப்பட்டு ஆக்ஸிஜன் உற்பத்தி பணிகள் தொடங்கும். இதனால் ஆக்ஸிஜன் உற்பத்தி பணியை தொடங்க இன்னும் 7 நாட்கள் ஆகலாம் என்று தூத்துக்குடி மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்