யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக அரசு பயிற்சி மையத்தில் 19 பேர் தேர்ச்சி!!
மத்திய அரசுப் பணியாளர் தேர்வாணையம் சார்பில் நடத்தப்பட்ட சிவில் சர்விஸ் மெயின் தேர்வுகளுக்கான முடிவுகள் நேற்று வெளியிடப்பட்டன. அதில் தமிழகத்அரசு பயிற்சி மையங்களில் பயிற்சி பெற்ற 9 பெண்கள் உட்பட 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
சிவில் சர்விஸ் தேர்வுகள்:
மத்திய அரசு பணியாளர் தேர்வாணையம் சார்பில் ஆண்டுதோறும் ஐஏஎஸ், ஐபிஎஸ் மற்றும் ஐஆர்எஸ் பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட்டு வருகின்றன. இந்நிலையில் 2020 ஆம் ஆண்டு 796 காலிப்பணியிடங்களுக்கான தேர்வுகள் நடத்தப்பட உள்ளதாக அறிவிப்பு வெளியானது. அதன்படி UPSC முதல்நிலை தேர்வுகள் அக்டோபர் மாதம் 4 ஆம் தேதி நடைபெற்றது. அதன் பின்னர் மெயின் தேர்வுகள் ஜனவரி மாதம் 8, 9, 10, 16, 17 என 5 நாட்கள் நடைபெற்றது.
TN Job “FB Group” Join Now
சென்னையில் மட்டுமே இந்த தேர்வுகள் நடைபெற்றது. தற்போது UPSC Mains தேர்வுக்கான முடிவுகள் வெளியிடப்பட்டுள்ளது. இந்த தேர்வுகளில் நாடு முழுவதும் தேர்வு எழுதியவர்களில் 2047 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அதில் தமிழகத்தை சேர்ந்தவர்கள் 153 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் தமிழக அரசு பயிற்சி மையங்களை சேர்ந்த 19 பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். அவர்களில் 9 பெண்கள் தேர்ச்சி பெற்றுள்ளனர்.
தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!
அவர்களுக்கு அகில இந்திய குடிமைப்பணி பயிற்சி மையத்தில் நவம்பர் மாதம் 11 ஆம் தேதி முதல் கடந்த ஜனவரி மாதம் 18 ஆம் தேதி வரை பயிற்சி வழங்கப்பட்டது. அவர்களுக்கு மாதம் 3000 ரூபாய் ஊக்கத்தொகையும் வழங்கப்பட்டது. முதன்மை தேர்வில் தேர்ச்சி பெற்றவர்களுக்கு மாதிரி ஆளுமை தேர்வு நடத்தப்பட உள்ளது. அதில் தேர்ச்சி பெற்ற மாணவர்கள் தவிர அனைத்து மாணவர்களும் பங்கேற்கலாம். இதற்கு கட்டணம் ஏதும் இல்லை.
தமிழகத்தில் வங்கிகளுக்கு 7 நாட்கள் விடுமுறை – அதிகாரிகள் விளக்கம்!!
இந்த தேர்வில் கலந்து கொள்ள விருப்பமுள்ளவர்கள் [email protected] என்ற மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்ய வேண்டும். தமிழக அரசு மையத்தில் படித்து ஆளுமை தேர்வுக்காக டெல்லி செல்லுவோருக்கு பயண செலவுக்கு ரூ.2000 வழங்கப்படுகிறது. இந்நிலையில் ஆளுமை தேர்வு டெல்லியில் உள்ள UPSC அலுவலகத்தில் ஏப்ரல் மாதம் நடைபெற உள்ளது.