தமிழக மருத்துவ கல்லூரி மாணவர்கள் 20 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அச்சம்!!
தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள ஒரத்தநாடு கால்நடை கல்லூரியில் பரிசோதனை செய்யப்பட்ட மாணவர்கள் 420 பேரில் 20 பேருக்கு தற்போது புதிதாக கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
மாணவர்களுக்கு கொரோனா:
தமிழகத்தில் வேகமெடுத்து வரும் கொரோனா தாக்கம் காரணமாக பள்ளி மற்றும் கல்லூரிகளில் மாணவர்கள், ஆசிரியர்கள் பாதிக்கப்பட்டுள்ளனர். இதன் காரணமாக தமிழக அரசு பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கி உள்ளது. குறிப்பாக தஞ்சாவூர் மாவட்டத்தில் உள்ள 13 பள்ளிகளில் 187 பேருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டுள்ளது.
TN Job “FB Group” Join Now
மேலும் அரசு பொறியியல் கல்லூரி மாணவர்களுக்கும், ஆசிரியர்களுக்கும் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. இதுவரை 4 கல்லூரியில் 18 மாணவர்களுக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டு சிகிச்சை வழங்கப்பட்டு வருகிறது. அதில் 115 பேர் குணமடைந்து வீடு திரும்பியுள்ளனர்.
தமிழகத்தில் முதுகலை பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
மேலும் ஒரத்தநாடு கால்நடை மருத்துவ கல்லூரி மாணவர் ஒருவருக்கு கொரோனா உறுதி செய்யப்பட்டதை தொடர்ந்து அந்த கல்லூரியில் இருந்த 430 மாணவர்களுக்கு கொரோனா உள்ளதா என பரிசோதனை செய்யப்பட்டது. அதில் தற்போது 20 மாணவர்களுக்கு தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டுள்ளது. இதனால் தஞ்சாவூர் மாவட்டத்தில் மட்டும் 225 மாணவ, மாணவிகள் கொரோனாவால் பாதிக்கப்பட்டுள்ளனர்.