தமிழகத்தில் முதுகலை பொறியியல் செமஸ்டர் தேர்வுகள் – ஏப்ரல் 15 முதல் தொடக்கம்!!
தமிழகத்தில் உள்ள பொறியியல் கல்லூரிகளில் முதுகலை படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் ஏப்ரல் மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட உள்ளது.
செமஸ்டர் தேர்வுகள்:
தமிழகத்தில் கொரோனா காரணமாக கல்லூரிகள் கடந்த ஆண்டு மார்ச் மாதம் முதல் மூடப்பட்டன. அதன் பின்னர் டிசம்பர் மாதம் 6 ஆம் தேதி முதல் இறுதியாண்டு மாணவர்களுக்கும், பிப்ரவரி மாதம் 8 ஆம் தேதி முதல் அனைத்து மாணவர்களுக்கும் நேரடி வகுப்புகள் தொடங்கப்பட்டன. கல்லூரிகள் திறக்கப்பட்டு 1 வாரத்திலேயே சென்னை ஐஐடி மாணவர்கள் கொரோனா தாக்கத்தினால் பாதிக்கப்பட்டனர்.
TN Job “FB Group” Join Now
அதன் பின்னர் மாணவர்களுக்கு ஆன்லைன் மூலமாக வகுப்புகள் மற்றும் தேர்வுகள் நடத்தப்பட்டு வந்தன. கொரோனா தாக்கம் குறையாமல் பரவி வந்த காரணத்தால் தமிழக அரசு கல்லூரிகளுக்கு விடுமுறை வழங்கப்பட உள்ளதாக உத்தரவிட்டது. மேலும் ஆன்லைன் மூலமாக பாடங்களையும் செமஸ்டர் தேர்வுகளையும் நடத்தப்பட வேண்டும் என அரசு தெரிவித்தது.
தமிழகத்தில் 10ம் வகுப்பு மாணவர்களுக்கு ஆன்லைன் தேர்வுகள் – பள்ளிகள் திட்டம்!!
தற்போது பொறியியல் கல்லூரியில் இளங்கலை மாணவர்களுக்கு முதலாம் ஆண்டு செமஸ்டர் தேர்வுகள் நடைபெற்று வருகின்றன. அவை வருகிற 26 ஆம் தேதியுடன் முடிவடைகின்றன. தமிழக அரசு இளங்கலை படிப்புகளுக்கான தேர்வுகளை மார்ச் 31 ஆம் தேதிக்குள் நடத்தி முடிக்க அறிவுறுத்தியது குறிப்பிடத்தக்கதாகும்.
தமிழகத்தில் 12 ஆம் பொதுத்தேர்வு தள்ளிவைப்பு? பள்ளிக்கல்வித்துறை ஆலோசனை!!
இந்நிலையில் மீண்டும் முதுகலை பொறியியல் படிப்புகளுக்கான செமஸ்டர் தேர்வுகள் அடுத்த மாதம் 15 ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டு 22 ஆம் தேதி வரை நடைபெற உள்ளது. இந்த தேர்வுகள் ஆன்லைன் மூலமாக நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.