தமிழகத்தின் 3 மாவட்டங்களில் மழைக்கு வாய்ப்பு – வானிலை ஆய்வு மையம் தகவல்!!
தமிழகத்தில் காற்றின் வேகமாறுபாட்டின் காரணமாக திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
வானிலை ஆய்வு மையம் அறிக்கை:
தமிழகத்தில் வெயிலின் தாக்கம் அதிகமாக உள்ளது. பொதுவாக அக்னி நட்சத்திரம் தொடங்கிய பின் தான் வெயில் அதிகமாக இருக்கும். ஆனால் தற்போது மார்ச் மாதமே வெயில் அதிகமாக உள்ளது. இருந்த போதிலும் தமிழகத்தில் காற்றின் வேகம் மாறுபாட்டின் காரணமாக மழைக்கு வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
TN Job “FB Group” Join Now
இன்று சென்னை வானிலை மையம் வெளியிட்ட அறிக்கையின் படி, திருநெல்வேலி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் லேசான மழை பெய்யக்கூடும். ஏனைய மாவட்டங்கள், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் பெரும்பாலும் வறண்ட வானிலையே நிலவும்.
யுபிஎஸ்சி தேர்வு முடிவுகள் வெளியீடு – தமிழக அரசு பயிற்சி மையத்தில் 19 பேர் தேர்ச்சி!!
சென்னையை பொறுத்தவரை அடுத்த 48 மணி நேரத்திற்கு வானம் பொதுவாக தெளிவாக காணப்படும். அதிகபட்ச வெப்பநிலையாக 35 டிகிரி செல்சியஸ் மற்றும் குறைந்தபட்ச வெப்பநிலையாக 25 டிகிரி செல்சியஸ் ஒட்டி இருக்கும்.