முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபராதம் – மாவட்ட ஆட்சியர் அறிவிப்பு!!
மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளதால் மக்கள் அனைவரும் பொது இடங்களில் கட்டாயம் முகக்கவசம் அணிய வேண்டும் என்று மாவட்ட ஆட்சியர் அறிவித்துள்ளார். முகக்கவசம் அணியாவிட்டால் ரூ.200 அபாரதம் விதிக்கப்படும் என்றும் எச்சரிக்கப்பட்டு உள்ளது.
கொரோனா தாக்கம்:
கடந்த 2019ம் ஆண்டு சீனாவின் ஒரு பகுதியில் இருந்து பரவத்தொடங்கிய கொரோனா நோய்த்தொற்று, ஒரு சில மாதங்களில் உலகின் அனைத்து பகுதிக்கும் பரவியது. கடந்த ஆண்டில் கொரோனா தொற்றின் தாக்கத்தினால் பல லட்சக்கணக்கான மக்கள் தங்கள் உயிரை இழந்துள்ளனர். இந்நிலையில், கொரோனா தொற்றின் இரண்டாம் அலை பரவத் தொடங்கியுள்ளது.
தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு – ஆசிரியர்கள் கவலை!!
மாவட்ட ஆட்சியர்:
மதுரை மாவட்ட ஆட்சியர் த.அன்பழகன் அவர்கள் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளார். அதில், மதுரை மாவட்டத்தில் கொரோனா தொற்று பரவாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. தற்போது மகாராஷ்டிரம், கேரளம் போன்ற அண்டை மாநிலங்களில் கொரோனா தொற்று இரண்டாம் அலை பரவி வருகிறது. இதனால் தமிழகத்தில் இ-பாஸ் முறை அமல்படுத்தப்பட்டுள்ளது.
அபராதம்:
மதுரை மக்களிடையே கொரோனா தொற்றின் அச்சம் மறைந்து வருகின்றது. இதனால் அவர்கள் அதிக மெத்தனப் போக்குடன் செயல்பட்டு வருகின்றனர். இதனால் கொரோனா இரண்டாம் அலை பரவ வாய்ப்புள்ளது. இனிமேல் மதுரையில் பொதுமக்கள் கட்டாயம் முகக்கவசம் அணியவும், அடிக்கடி கைகளை கழுவவும் கேட்டுக்கொள்ளப்படுகிறார்கள். பொது இடங்களில் முகக்கவசம் அணியாதவர்களுக்கு ரூ.200 அபராதம் விதிக்க உத்தரவிடப்பட்டுள்ளது என்று கூறினார்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்