தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவிகள் 11 பேருக்கு கொரோனா – பெற்றோர்கள் அதிர்ச்சி!!
தமிழகத்தின் திருவாரூர் மாவட்டத்தில் உள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 11 மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதி செய்யப்பட்டு உள்ளது பெற்றோர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் அந்த பள்ளி விடுதி மூடப்பட்டு அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர்.
கொரோனா உறுதி:
தமிழகத்தில் கொரோனா பரவல் காரணமாக பள்ளிகள் மூடப்பட்ட காரணத்தால் மாணவர்களுக்கு ஆன்லைன், கல்வி தொலைக்காட்சி வாயிலாக வகுப்புகள் நடத்தப்பட்டது. இந்நிலையில் 11 மாதங்களுக்கு பின்னர் கடந்த ஜனவரியில் 9 முதல் 12ம் வகுப்புகளுக்கு பள்ளிகள் திறக்கப்பட்டன. மேலும் அடுத்த கல்வியாண்டுக்கான பள்ளிகள் திறப்பு குறித்த தேதியும் இதுவரை அறிவிக்கப்படவில்லை. அதுமட்டுமின்றி பிற வகுப்புகளுக்கான நேரடி வகுப்புகள் தொடங்குவது குறித்தும் அறிவிப்பு வெளியாகவில்லை.
இதற்கிடையில் சில மாவட்டங்களில் பள்ளி ஆசிரியர்கள் மற்றும் மாணவ, மாணவிகளுக்கு கொரோனா தொற்று உறுதியாகி வருவது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. இதனால் பள்ளிகளில் கொரோனா முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை கண்டிப்பாக பின்பற்ற வேண்டும் என அறிவுறுத்தப்பட்டுள்ளது. திருவாரூர் மாவட்டத்தில் உள்ள மன்னார்குடி அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் 12ம் வகுப்பு பயிலும் 5 மாணவிகளுக்கு நேற்று கொரோனா தொற்று உறுதியானது.
தமிழக ரேஷன் அட்டைதாரர்களுக்கு 1 லிட்டர் இலவச பால் – இமமுக தேர்தல் அறிக்கை!!
இவர்கள் விடுதியில் பயிலும் மாணவிகள் என்பதால் சக மாணவிகளுக்கும் பரிசோதனை மேற்கொள்ள உத்தரவிடப்பட்டது. அதன்படி 11 மாணவிகளுக்கு தற்போது கொரோனா உறுதியாகி உள்ளது. இதனால் விடுதி மூடப்பட்டு மாணவிகள் அனைவரும் தனிமைப்படுத்தப்பட்டு உள்ளனர். பள்ளி மாணவிகள் தொடர்ச்சியாக கொரோனா பாதிப்புக்கு உள்ளாகி வருவது பெற்றோர்களை அதிர்ச்சி அடைய செய்துள்ளது.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்