தமிழகத்தில் 12ம் வகுப்பு தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்பு – ஆசிரியர்கள் கவலை!!
தமிழகத்தில் 12ம் வகுப்பு மாணவர்களின் பொதுத்தேர்வு வினாத்தாள் வடிவத்தில் மாற்றங்களை மேற்கொண்டு அகமதிப்பெண்களை 30 ஆக மாற்ற வேன்டும் என்று ஆசிரியர்கள் கோரிக்கை வைத்துள்ளனர்.
பொதுத்தேர்வுகள்:
தமிழகத்தில் 12ம் வகுப்புக்கான பொதுத்தேர்வுகள் மே மாதம் 3ம் தேதி நடக்க உள்ளது. நடப்பு ஆண்டில் 12ம் வகுப்பு தேர்வுகளை 8.6 லட்சம் மாணவர்கள் எழுத உள்ளனர். 12ம் வகுப்பு மாணவர்களுக்கு ஜனவரி 19ம் தேதி முதல் தான் பள்ளிகள் செயல்பட தொடங்கியது. முன்னதாக பாடங்கள் கல்வி தொலைக்காட்சி & வாட்ஸ்ஆப் மூலமாக நடத்தப்பட்டாலும் பின்தங்கிய வகுப்புகளை சேர்ந்த மாணவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.
தமிழகத்தில் பெண் கல்வி உதவித்தொகை வழங்கல் – ஆதிதிராவிட நலத்துறை அறிவிப்பு!!
ஆசிரியர்களின் கோரிக்கை:
பள்ளி வேலை நாட்கள் மிகவும் குறைவாக உள்ளதால் மாணவர்கள் பாடங்களை புரிந்து கொள்வதில் சிரமங்கள் ஏற்படுகிறது. பொதுவாக ஜனவரி மற்றும் பிப்ரவரி மாதங்களில் மாணவர்களுக்கு திருப்புதல் தேர்வுகள் நடத்தப்படும். ஏப்ரல் மாதம் வரை பாடங்கள் நடத்தப்பட இருக்கிறது. தற்போது முதல் பருவத்தேர்வுகளிலும் மாணவர்களின் தேர்ச்சி விகிதம் மிகவும் பின்தங்கியுள்ளது.
12ம் வகுப்பு பொதுத் தேர்வுகளிலும் மாணவ, மாணவிகளின் தேர்ச்சி விகிதம் குறைய வாய்ப்புள்ளதாகவும் ஆசிரியர்கள் வருத்தத்தில் உள்ளனர். இதனால் 12ம் வகுப்பு தேர்வின் வினாத்தாள் முறையை மாற்றி செய்முறை தேர்வற்ற பாடங்களுக்கு 30 மதிப்பெண்களை அகமதிப்பெண்ணாகவும், செய்முறை தேர்வுள்ள பாடங்களுக்கு 15 மதிபெண்களை அகமதிப்பெண்ணாகவும் உயர்த்தி வழங்க வேண்டும் என்று ஆசிரியர்கள் கோரி உள்ளனர்.
Velaivaippu Seithigal 2021
To Subscribe => Youtube Channel கிளிக் செய்யவும்
To Join => Whatsapp கிளிக் செய்யவும்
To Join => Facebook கிளக் செய்யவும்
To Join => Telegram Channel கிளிக் செய்யவும்