ரூ.2,000 நோட்டுகள் திரும்ப பெறப்பட்டன.. ரிசர்வ் வங்கி அதிரடி அறிவிப்பு..!!
கடந்த 2016 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் ரூ.2000 நோட்டுகள் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும், பொதுமக்கள் தங்கள் வங்கிக் கணக்குகளில் வரவு வைக்க நாட்டின் எந்த தபால் நிலையத்திலிருந்தும் ரூ.2,000 நோட்டுகளை இந்தியா போஸ்ட் மூலம் அனுப்பலாம் என்று தெரிவிக்கப்பட்டது. இதை தொடர்ந்து, மே 19, 2023 ஆம் தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இந்நிலையில் இது குறித்து முக்கிய தகவல் ஒன்று தற்போது வெளியாகியுள்ளது.
TNPSC Tamil Ilakkanam Ethir Sol Study Material – Free PDF Download
அதாவது, மே 19, 2023 ஆம் தேதி அன்று, இந்திய ரிசர்வ் வங்கி புழக்கத்திலிருந்து ரூ.2,000 மதிப்புள்ள நோட்டுகளை திரும்பப் பெறுவதாக அறிவித்தது. இதனால் புழக்கத்திலிருந்த ரூ.2,000 ரூபாய் நோட்டுகளின் மொத்த மதிப்பு நவம்பர் 29, 2024 ஆம் தேதி அன்று ரூ.6,839 கோடியாக குறைந்தது. இதை தொடர்ந்து, “தற்போது மீண்டும் ரூ.2,000 நோட்டுகள் 98.26% திரும்ப பெறப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. அதாவது, மே 19, 2023 ஆம் ஆண்டில் இருந்து ரூ.3.56 லட்சம் கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் புழக்கத்தில் இருந்ததாகவும், இன்றைய நிலவரப்படி ரூ.6,181 கோடி மதிப்பிலான ரூ.2,000 நோட்டுகள் மட்டுமே புழக்கத்தில் உள்ளன என்று ரிசர்வ் வங்கி தெரிவித்துள்ளது”.


























