மத்திய அரசு ஊழியர்களுக்கான ஜாக்பாட் அறிவிப்பு – 8 வது ஊதியக்குழு அமல்!
மத்திய அரசு ஊழியர்களுக்கான ஊதியம் அதிகரிக்கப்படுவதற்கான வாய்ப்புகள் குறித்த ஆலோசனை நடந்து வருகிறது. ஆலோசனை முடிவில் புதிய திட்டம் அமல்படுத்தப்படும் நிலையில் மத்திய அரசு ஊழியர்கள் மிகவும் அதிக அளவிலான ஊதிய உயர்வை பெறுவார்கள்.
8 வது ஊதியக்குழு:
மத்திய அரசு ஊழியர்களுக்கான சம்பளமானது அமலில் உள்ள ஊதியக்குழுவின் ஆலோசனையின் படி செலுத்தப்படுகிறது. 1947 ம் ஆண்டு முதல் ஊதியக்குழு அமைக்கப்பட்டு செயல்பட்டு வருகிறது. ஒவ்வொரு 10 ஆண்டுகளுக்கு ஒரு முறை ஊதியக்குழு மாற்றி அமைக்கப்பட்டு வருகிறது. இந்நிலையில், இறுதியாக 2013ம் ஆண்டு 7 வது ஊதியக்குழு அறிவிக்கப்பட்டு, 2016ம் ஆண்டு அமலுக்கு வந்தது.
இந்நிலையில், 2024ம் ஆண்டு மக்களவை தேர்தல் நடக்க உள்ளதால், 8 வது ஊதியக்குழுவிற்கான ஆலோசனை அதற்கு முன்னதாக தொடங்கப்பட்டு, அறிவிக்கப்படும் என்றும், 2026ம் ஆண்டு அமலுக்கு வரலாம் என்றும் தகவல் வெளியாகிறது. இதன்மூலம் மத்திய அரசு ஊழியர்களின் சம்பளம் 44.44% உயர்த்தப்பட்டு, அடிப்படை சம்பளம் ரூ.26,000 ஆக அதிகரிக்கப்படும் வாய்ப்புகள் உள்ளது. இதற்கான அதிகாரப்பூர்வ அறிவிப்புகள் விரைவில் வெளியாகலாம் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.