விமான பயணிகள் அலர்ட்..சென்னையில் மீண்டும் 8 விமானங்கள் ரத்து..!! “அதிகாரிகள் விளக்கம் “..!!
தமிழகத்தில் வடகிழக்கு பருவ மழை காரணமாக பல்வேறு பகுதிகளில் தொடர்ந்து மழை பெய்து வரும் நிலையில், சென்னையில் கடந்த 2 நாட்களாக இடியுடன் கூடிய கனமழை கொட்டி தீர்த்தமையால் அனைத்து வகையான போக்குவரத்து சேவைகளும் பாதிக்கப்பட்டது. இதனால், விமான சேவைகளும் தற்காலிகமாக ரத்து செய்யப்பட்டது.
TET-2024 தேர்வுக்கு 10,000 காலிப்பணியிடங்களா…? முழு விவரம் உள்ளே”..!!
அந்த வகையில், தற்போது கனமழை விட்டு சென்னை மாநகரம் இயல்பு நிலைக்கு திரும்பியுள்ள நிலையில், மீண்டும் 8 விமான சேவைகள் ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிவிக்கப்பட்டுள்ளது. அதாவது, சென்னையில் இருந்து புறப்படும் விமானங்கள் மற்றும் வருகை தரும் விமானங்களில் போதிய பயணிகள் இல்லாத காரணத்தால் ரத்து செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் விளக்கம் அளித்துள்ளனர்.
























